முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அவரின் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்களும் வாஜ்பாய் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர். இந்தியாவின் உயரிய விருதான, 'பாரத ரத்னா' விருதைப் பெற்றுள்ள வாஜ்பாய்,உடல்நலக் குறைவு காரணமாக 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி, தன்னுடைய 93-வதுவயதில் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.