Skip to main content

15 மாதங்களுக்கு பிறகு வெளிநாடு புறப்பட்ட பிரதமர் மோடி

Published on 26/03/2021 | Edited on 26/03/2021

 

Prime Minister Modi leaves abroad after 15 months

 

இந்திய பிரதமர் மோடி, வெளிநாட்டுப் பயணங்களுக்காக எதிர்க்கட்சிகளால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருபவர். கடைசியாக 2019 நவம்பர் மாதம் வெளிநாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்திருந்த பிரதமர் மோடி, அதன்பிறகு சுற்றுப்பயணம் எதையும் மேற்கொள்ளவில்லை. கடந்த வருடம் கரோனா பரவலால் பிரதமர் மட்டுமின்றி, மத்திய அமைச்சர்களும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவில்லை.

 

இந்நிலையில் 15 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக இன்று (26.03.2021) வெளிநாட்டு பயணமாக வங்கதேசம் புறப்பட்டுள்ளார் பிரதமர் மோடி. 2 நாள் பயணத்தில் வங்கதேச தேசிய தின விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறார்.

 

"எனது பயணம், பிரதமர் ஷேக் ஹசீனாவின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் வங்கதேசம் அடைந்துள்ள வியப்பூட்டும் பொருளாதார மற்றும் வளர்ச்சி ரீதியிலான முன்னேற்றங்களுக்குப் பாராட்டு தெரிவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக மட்டுமல்லாமல், இந்தச் சாதனைகளுக்கு இந்தியாவின் நிலையான ஆதரவை அளிக்கும் வகையிலும் இருக்கும்" என தனது பயணம் குறித்து மோடி குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்