தமிழகம்மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடுமுடிந்து தேர்தல் பிரச்சாரம், பரப்புரை உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் பிஸியாக இயங்கிவருவதால், தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் வரும் 30 ஆம் தேதி புதுச்சேரி வர இருக்கிறார் பிரதமர் மோடி. 30 ஆம் தேதி புதுச்சேரி வரும் பிரதமர் அன்று மாலை 4 மணிக்கு பாஜக மற்றும் அவரது கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் என புதுச்சேரி மாநில பாஜக அறிவித்துள்ளது.