Advertisment

9 வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர்!

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளும் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் டெல்லியில் 9 வது முறையாக தேசியக் கோடியை பிரதமர் மோடி ஏற்றிவைத்தார். முன்னதாக மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு டெல்லிசெங்கோட்டைக்கு வந்த அவருக்கு முப்படை அணிவிப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட பிரதமர், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இன்று பிரதமர் மோடி நிகழ்த்தக்கூடிய உரையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கான முன்னோடி திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வருடம் சிறப்பு அழைப்பாளர்களாக அங்கன்வாடி பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள், முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்கள், பிணவறையில் பணி செய்யக்கூடிய பணியாளர்கள் உள்ளிட்ட சமுதாயத்தில் அதிகம் கவனிக்கப்படாதவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

Delhi independence day. modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe