Advertisment

இந்தியாவின் முதல் குடிமகனுக்கு கரோனா தடுப்பூசி!

ram nath kovind

கரோனா ஒழிப்பு நடவடிக்கையாக, தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், மார்ச் 1 ஆம் தேதியிலிருந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயது மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசிசெலுத்தும் பணிகள்தொடங்கியது.

Advertisment

மார்ச்1 ஆம் தேதி பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையாநாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,பீகார்முதல்வர் நிதிஷ்குமார், ஒடிசாமுதல்வர் நவீன்பட்நாயக் உள்ளிட்ட பலர் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸைசெலுத்திக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று (மார்ச்2) மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், ராஜ்நாத்சிங், ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் கரோனாதடுப்பூசியின் முதல் டோஸைசெலுத்திக்கொண்டனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து இன்று (03.03.2021) இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். டெல்லியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் குடியரசுத் தலைவருக்குக் கரோனாதடுப்பூசி செலுத்தப்பட்டது.

coronavirus vaccine Ramnath kovind
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe