Skip to main content

புதிய அமைச்சரவை; 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகள், 6 மருத்துவர்களுக்கு இடம்...

Published on 07/07/2021 | Edited on 07/07/2021

 

President Ram Nath Kovind arrives at Rashtrapati Bhavan for the swearing-in ceremony of 43 new ministers

 

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையின் பதவியேற்பு விழா இன்று (07/07/2021) மாலை 06.00 மணிக்கு நடைபெற்றது.


விழாவில், எல்.முருகன், மீனாட்சி லேகி, அன்னபூர்ணாதேவி, நாராயணசுவாமி, கவுசல் கிஷோர், அஜய் பட், பி.எல்.வர்மா, அஜய்குமார், சவுகான் தேவ்சிங், பக்வந் கவுபா, கபில் மோரேஷ்வர் படேல், பிரதிமா பவுதிக், சுப்ஹஸ் சர்கார், பக்வத் கிஷன்ராவ் காரத், ராஜ்குமார் ரஞ்சன் சிங், வீரேந்திர குமார், பாரதி பிரவின் பவார், பிஷ்வேஸ்வர், சாந்தனு தாக்கூர், முஞ்சப்பரா மகேந்திர பாய், ஜான் பர்லா, நிதிஷ் பிரமானிக், ஜோதிராதித்ய சிந்தியா, சோனாவால், நாராயண் ரானே, கிஷன் ரெட்டி, ராமச்சந்திர பிரசாத் சிங், அஸ்வினி வைஷ்ணவ், கிரண் ரிஜிஜூ, பசுபதி குமார் பாரஸ், ராஜ்குமார் சிங், ஹர்தீப்சிங் பூரி, மன்சுக் மாண்டாவியா, பூபேந்தர், புருஷோத்தம் ரூபாலா, அனுராக் தாக்கூர், பங்கஜ் சவுத்ரி, அனுப்ரியா சிங் படேல், சத்யபால் சிங் பாகல், ராஜீவ் சந்திரசேகர், சோபா, பானுபிரதாப் சிங் வர்மா, தர்ஷனாவிக்ரம் ஜர்தோஷ் ஆகிய 43 பேர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றனர். மத்திய அமைச்சர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  

 

President Ram Nath Kovind arrives at Rashtrapati Bhavan for the swearing-in ceremony of 43 new ministers

 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த புதிய அமைச்சரவையில் 43 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகள், 6 மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

 

President Ram Nath Kovind arrives at Rashtrapati Bhavan for the swearing-in ceremony of 43 new ministers

 

பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநயாகர் ஓம் பிர்லா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா  உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிப்ரவரி 14; “இந்தியா என்றும் மறக்காது” - பிரதமர் மோடி 

Published on 14/02/2023 | Edited on 14/02/2023

 

pm modi  tweet about Pulwama incident

 

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதியான இன்று புல்வாமா தாக்குதலில் தங்களது உயிரைத் தியாகம் செய்த இந்திய வீரர்களை என்றும் மறக்கமாட்டோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களை நினைவுகூர்வோம். அவர்களின் உன்னத தியாகத்தை என்றும் இந்தியா மறக்காது. வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க அவர்களின் தைரியம் நம்மை  ஊக்குவிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

Next Story

பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

 

Chief Minister M. K. Stalin will participate in the meeting led by the Prime Minister!

 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவிருக்கும் முதலமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவிருக்கிறார். 

 

அடுத்தாண்டு ஜி20 நாடுகளின் மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இது தொடர்பான, முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் வரும் டிசம்பர் 5- ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

 

இதில் கலந்து கொள்வதற்காக வரும் டிசம்பர் 4- ஆம் தேதி அன்று டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டிசம்பர் 5- ஆம் தேதி அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார். இந்த பயணத்தின் போது, தனிப்பட்ட முறையில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தமிழகம் நலன் சார்ந்த கோரிக்கைகளையும் முன் வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றன. 

 

ஏற்கனவே, பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.