Advertisment

நல்லாசிரியர் விருது... காணொளி காட்சி வாயிலாக வழங்கினார் குடியரசு தலைவர்...

president presented award to teachers

ஆசிரியர் தினமான இன்று நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு காணொளி காட்சி வாயிலாக குடியரசு தலைவர் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

Advertisment

ஆசிரியர்களின் கல்விப்பணியைப் போற்றும் விதமாக நாடு முழுவதிலும் இருந்து சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 47 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், தமிழகத்தைசேர்ந்த இருவர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழகத்தின் விழுப்புரம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலிப் மற்றும் சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை சரஸ்வதி உள்ளிட்ட 47 ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆசிரியர் தினமான இன்று நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு காணொளி காட்சி வாயிலாக குடியரசு தலைவர் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

Advertisment

Ramnath kovind teachers
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe