Skip to main content

"கடவுள் உங்களுக்கு அருள்புரிவார்"... கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர்...

Published on 29/01/2020 | Edited on 29/01/2020

அரசியல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதாதளக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

 

prashant kishor dismissed from ujd

 

 

அரசியல் வியூகங்கள் அமைக்கும் ஐ-பேக் அமைப்பின் தலைவரான பிரசாந்த் கிஷோர் பீகாரின் ஐக்கிய ஜனதாதளக் கட்சியில் அங்கம் வகித்து வந்தார். குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் பிரசாந்த் கிஷோருக்கும், பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கட்சிக்குள் குழப்பங்கள் நீடித்து வந்தன.

இந்நிலையில். பிரசாந்த் கிஷோர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரசாந்த் கிஷோர், ‘‘நிதிஷ்குமாருக்கு நன்றி. பீகார் முதல்வராக பதவியை தக்க வைத்துக் கொண்ட அவருக்கு எனது வாழ்த்துகள். கடவுள் உங்களுக்கு அருள்புரிவார்’’ எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பீகார் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Confidence vote in Bihar Assembly today

பீகார் மாநிலத்தில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளடக்கிய மகா கூட்டணியை அமைத்து மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராகப் பதவி வகித்து வந்தார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில்தான் ஆளும் கட்சி கூட்டணிக்குள் ஏற்பட்ட சில முரண்பாடுகளால் நிதிஷ்குமார் மகா கூட்டணியிலிருந்து விலகியதுடன் தனது பதவியையும் ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே (28.01.2024) பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பீகார் சட்டப்பேரவையில் இன்று (12.02.2024) நடைபெற உள்ளது. 243 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அதே சமயம் பா.ஜ.க. 78, ஐக்கிய ஜனதா தளம் 45, இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா 4, ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. என பாஜக கூட்டணி அரசுக்கு 128 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் பாட்னாவில் உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் வீட்டின் முன்பு நேற்று இரவு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் கண்டித்து அக்கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே ஹைதராபாத்தில் தங்க வைக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாட்னா திரும்பினர். தேஜஸ்வி யாதவ் வீட்டில் ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சேட்டன் ஆனந்த் கடத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவரது சகோதரர் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதற்கு தான் விருப்பப்பட்டே இங்கு தங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

Next Story

நிதிஷ்குமாரின் முடிவு; பிரசாந்த் கிஷோரின் கணிப்பு - பரபரப்பான தேர்தல் களம்

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
 Prashant Kishor Prediction on Nitish Kumar Politics

பீகார் மாநிலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளடங்கிய மகா கூட்டணியை அமைத்து மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராகப் பதவி வகித்து வந்தார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில்தான் கடந்த 28 ஆம் தேதி நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, மகா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர் அன்று மாலையே பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் பீகார் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சேர்த்து பாஜகவை சேர்ந்த சாம்ராட் சௌதிரி, விஜய் சின்ஹா இருவரும் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்கள். 

இதனிடையே பாஜகவை வீழ்த்துவதற்காக நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கினார் நிதிஷ்குமார். இந்தியா கூட்டணி தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவைகளை பற்றி ஆலோசித்து வரும் நிலையில், நிதிஷ்குமார் தற்போது அதில் இருந்து பாஜக தலைமையில் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்திருப்பது தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் நிதிஷ்குமாரின் முடிவு குறித்து தேர்தல் வீயூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், “2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் வரைகூட இந்த புதிய கூட்டணி நீடிக்காது. இதனை நான் உங்களுக்கு எழுதி தருகிறேன். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த 6 மாதங்களில் இந்தக் கூட்டணியில் மீண்டும் மாற்றம் நடக்கும். இதனைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். என்னுடைய கணிப்புப்படி சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தால் 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறமுடியாது. அப்படி வெற்றிபெற்றுவிட்டால், நான் இதிலிருந்து ஓய்வு பெறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.