Advertisment

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளை அறுவை சிகிச்சை...

Pranab Mukherjee undergoes brain surgery

Advertisment

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரணாப் முகர்ஜி (84) மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றபோது, அவருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார். இந்நிலையில், அவருக்கு மூளையிலிருந்த ரத்த உறைவு காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக ஏற்கனவே வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைபெற்று வந்த அவருக்கு தற்போது மூளை அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரணாப் முகர்ஜிக்கு இராணுவத்தின் ஆர் அண்ட் ஆர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது உடனிலை மோசமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

corona virus Pranab Mukherjee
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe