ADVERTISEMENT

"பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்" மருத்துவமனை தகவல்...

04:45 PM Aug 12, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா தொற்றுடன் மூளை அறுவைசிகிச்சை செய்துகொண்ட பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளதாக மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த திங்கள்கிழமை பிரணாப் முகர்ஜி (84) மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றபோது, அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில், அவருக்கு மூளையிலிருந்த ரத்த உறைவு காரணமாக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக ஏற்கனவே வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைபெற்று வந்த அவருக்கு, இராணுவத்தின் ஆர் அண்ட் ஆர் மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சுவாசம் வழங்கப்பட்டு வருவதாகவும் டெல்லி ராணுவ மருத்துவமனை அறிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT