yediyurappa

கர்நாடக மாநில பாஜகவில் நீண்ட நாட்களாக உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு எதிராக கட்சியில் உள்ளவர்களே போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் எடியூரப்பாவின் பதவி பறிக்கப்படும் என தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே பாஜக மேலிடபொறுப்பாளர் அருண் சிங், எடியூரப்பாவின் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தினார்.

Advertisment

இருப்பினும் இருப்பினும் அதிருப்தி ஓயவில்லை. இந்தநிலையில் எடியூரப்பா, தனத மகன் விஜயேந்திராவுடன் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். மாநில விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டாலும், எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல்கள் வெளியானது.ஆயினும் அடுத்த நாள் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசிய எடியூரப்பா, தான் பதவி விலகப்போவதாக வெளியான தகவல்களை திட்டவட்டமாக மறுத்தார். மாநிலத்தில் தலைமையை மாற்றுவது குறித்து எந்த விவாதமும் எழவில்லை எனவும் தெரிவித்தார்.

Advertisment

இருப்பினும் பிரதமருடனான சந்திப்பில், எடியூரப்பா தனது உடல்நிலையை கரணம் காட்டி பதவி விலக முன்வந்ததாகவும், அதற்கு பதிலாக தனது மகனுக்கு மாநில பாஜகவில் முக்கிய பதவி வழங்கவேண்டும் என கேட்டதாகவும் தகவல் வெளியானது. மேலும் எடியூரப்பாவின் ராஜினாமவை ஏற்பது குறித்து பாஜக மேலிடம் விரைவில் முடிவெடுக்கும் எனவும் தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில்சில நாட்களுக்கு முன் எடியூரப்பா, வரும் 26 ஆம் தேதிக்கு பிறகு பாஜக தேசியத்தலைவர்ஜே.பி நட்டா எடுக்கும் முடிவை பின்பற்றுவேன் என தெரிவித்தார். இதனால்எடியூரப்பா 26 ஆம் தேதிக்கு பிறகு பதவி விலகுவர் என என கருதப்படுகிறது.

இந்தநிலையில்பாஜக தலைமை, எடியூரப்பாவிற்கு பிறகு யாரை முதல்வராகலாம் என ஆலோசனை நடத்தி வருவதாகவும், எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்குவதால் அதிருப்தியடையும் லிங்கயாத்சமூகத்தை சமாதானப்படுத்தும் வகையில், அந்த சமூகத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக்க பாஜக திட்டமிடுவதாகவும்தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மத்திய அமைச்சர்பிரல்ஹாத் ஜோஷியைகர்நாடக முதல்வராக்கபாஜக முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே "மத்திய தலைமை, டெல்லியிலிருந்து ஒருவரை முதல்வராக நியமிக்கும்" என பாஜக தலைவர் பேசுவது போன்று ஆடியோ ஒன்று வைரலானது குறிப்பிடத்தக்கது.