ADVERTISEMENT

மத்திய அமைச்சருக்கு கரோனா உறுதி!

06:34 PM Apr 16, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி கரோனா உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைக் கடந்துள்ளது. இதனால், பல்வேறு மாநிலங்களில், கரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், தன்னோடு கடந்த இரண்டு மூன்று நாட்களாக தொடர்பில் இருந்தவர்களை கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இன்று கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா, காங்கிரஸின் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோருக்கும் கரோனா உறுதிசெய்யப்பட்டது. எடியூரப்பாவிற்கு இரண்டாவது முறையாக கரோனா உறுதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT