ADVERTISEMENT

"காங்கிரசும், ஆம் ஆத்மியும் தான் காரணம், வீடியோ கிடைத்துள்ளது" - பிரகாஷ் ஜவடேகர்...

04:02 PM Feb 27, 2020 | kirubahar@nakk…

சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேரணிக்கு பின்னர் அங்கு வெடித்த கலவரங்களால் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகள் பதட்டமான சூழலை சந்தித்தன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த கலவரங்களில் 150 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் சூழலில் 35 பேர் இந்த கலவரங்களால் பலியாகியுள்ளார். இந்நிலையில் இந்த கலவரம் குறித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "டெல்லி வன்முறைக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள்தான் காரணம். கையில் ஆயுதங்களுடன் ஆம் ஆத்மி கவுன்சிலர் வன்முறையில் ஈடுபடும் வீடியோ கிடைத்திருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT