Skip to main content

“விவசாயப் பயன்பாட்டிற்கு 8 மணி நேரம் மின்சாரம் போதும்...” மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங்

Published on 26/02/2019 | Edited on 26/02/2019

மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே. சிங், 24 மணி நேரமும் மக்களுக்கு மாநில அரசு மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

 

rk singh

 

மின்சாரத் துறை அமைச்சர்கள் மாநாடு மத்திய நிதி அமைச்சர் ஆர்.கே. சிங் தலைமையில் இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்களாக டெல்லியில் நடந்து வருகிறது.
 

மாநில மின்சாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே. சிங், மாநிலங்களுக்கு மின்சாரம் மற்றும் நிலக்கரி ஒதுக்கீடு; மின் வழித்தடம் அமைப்பது, உள்ளிட்ட விஷயங்களை குறித்து கலந்து ஆலோசித்தார். 
 

அந்த மாநாட்டில் பேசிய மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே. சிங், “மாநில அரசுகள் மத்திய அரசுடன் ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தங்கள் மாநில மக்களுக்கு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்.


விவசாய நிலங்களுக்கான மின் மோட்டாருக்கான மின் இணைப்பு தவிர்த்து மற்றவர்களுக்கு 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவேண்டும். விவசாய மின் மோட்டார்களுக்கு 8 முதல் 10 மணி நேரம் மின்சாரம் வழங்கினால் போதுமானது” என மின்சார துறை அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே. சிங், தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அழுகிய நிலையில் இரு சடலம் மீட்பு; இ.பி மீது பொதுமக்கள் கொந்தளிப்பு

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
Two farmers passed away in Tenkasi electrocution

தென்காசி மாவட்டத்தின் புளியங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளான சண்முகவேல் மற்றும் குருசாமி இருவரும் சகோதர வழி உறவினர்கள். இருவருக்கும் கிராமத்தின் வெளியே தனித்தனியாக ஒன்று மற்றும் ஒன்றரை ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. அதில் கடந்த 5ம் தேதியன்று தான் செய்த விவசாய மகசூலைப் பார்க்கச் சென்றிருக்கிறார் சண்முகவேல். வயலை சுற்றிப்பார்த்து வந்த சண்முகவேல் எதிர்பாராத வகையில் வயலில் அறுந்த கிடந்த ஹெவி மின் வயரைக் கவனிக்காமல் மிதித்திருக்கிறார். இதில் ஹெவி வோல்டேஜ் மின்சாரம் தாக்கிய சண்முகவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகி இருக்கிறார்.

சண்முகவேல் வீட்டுக்கு வராததை அறிந்த அவரது உறவினர்கள் குருசாமியிடம் கேட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த 6ம் தேதியன்று மதியம் வயல் பகுதிக்கு சென்ற குருசாமி, அங்கே சண்முகவேலைத் தேடியிருக்கிறார். அவர் குப்புறக் கிடந்ததைக் கண்டு பதறியவர் அவரைத் தட்டி எழுப்ப முயற்சித்துள்ளார் குருசாமி. இதில் பக்கத்தில் கிடந்த ஹெவி மின்வயர் பட்டதால் மின்சாரம் தாக்கி அவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகி இருக்கிறார்.

Two farmers passed away in Tenkasi electrocution

இந்த நிலையில் நேற்று முன்தினம் பக்கத்து வயல்காரரான குமார் தன் வயலுக்குச் சென்றபோது அங்கே அடுத்தடுத்து மின்சாரம் தாக்கப்பட்டு சண்முகவேலும், குருசாமி இருவரும் உயிரிழந்துகிடப்பது தெரியவரவே உடனே புளியங்குடி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்திருக்கிறார். அதையடுத்து சம்பவ இடம் விரைந்த இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் எஸ்.ஐ.சஞ்சய்காந்தி உள்ளிட்ட போலீசார் அழுகிய நிலையில் கிடந்த இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து புளியங்குடி போலீசார் விசாரணை நடத்த, ஊருக்குள்ளோ இந்த சம்பவம் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி ஊர்மக்கள் திரண்டிருக்கிறார்கள். ‘வயல்வெளி பகுதிகளில் செல்லும் அதீக அழுத்த மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் மறுநொடியே அது தொடர்பான டிரான்ஸ்ஃபார்மரின் அந்த வழி மின் இணைப்பிற்கான ஃபியூஸ் தானாகவே கட்டாகி மின்இணைப்பு துண்டித்து விடுகிற வகையில் தானே செட் செய்வது வழக்கம். அப்படியிருக்க இந்த மின்வயர் அறுந்த உடனே ஏன் மின் இணைப்பு கட்ஆகல. முறைப்படி செய்யப்பட்டிருந்தா விலை மதிப்புள்ள இரண்டு விவசாயிகளின் உயிர் பலியாகி இருக்குமா. இதுக்கு இ.பி. பதில் சொல்லணும்.

உயிரிழந்தவர்களில் சண்முகவேலுக்கு மனைவியும் 2 பெண்பிள்ளைகளும், குருசாமிக்கு மனைவியும் 3 பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர். இவர்களுக்கு போதிய நிவாராண உதவியோட ரெண்டு குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்கவேண்டும். அப்போதுதான் உடலை வாங்குவோம்’ என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதையடுத்து, மின்வாரியத் துறை பலியான இரண்டு குடும்பங்களுக்கும் தலா மூன்று லட்சம் என 6 லட்சம் இழப்பீடு அளித்திருக்கிறது. அதிகாரிகளின் உறுதியளித்ததைத் தொடர்ந்து உடல்களை வாங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

Next Story

33 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாத கிராம மக்கள்!

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
Villagers without electricity for 33 years

புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புவனகிரி ஒன்றிய செயலாளர் மணி தலைமையில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கீழ் வளையமாதேவி கிராம பொதுமக்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்

அந்த மனுவில், கீழ்வளையமாதேவி கிராமத்தில் 35க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் கடந்த 33 ஆண்டுகளாக மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாமல் வசித்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பலமுறை மனு கொடுத்தும் நேரில் வலியுறுத்தியும் கடலூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது மழை தொடர்ந்து விட்டுவிட்டுப் பெய்து வருவதால், சாலைகள் சேரும் சகதியுமாக நடக்க முடியாத சூழ்நிலையில், கீழ் வளையமாதேவி பகுதி முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக உள்ளது.

எனவே இப்பகுதியில் வசிக்கும் 35க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மின்சார வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்நிகழ்வில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் கீழ்வளையாமதேவி கிளை தலைவர் பழனிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.