Skip to main content

நித்திக்கு உதவிய பெண் தொழிலதிபர் மீது வழக்கு!

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

 

தனிநாடு அறிவிப்பின் மூலம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் தலைமறைவு குற்றவாளி நித்தியானந்தா. நித்தியானந்தாவுக்கு சகல உதவிகளையும் செய்து வந்த பெண் தொழிலதிபர் தற்போது போலீசாரின் விசாரணை வலையத்திற்குள் வந்திருக்கிறார்.

 

p

 

குஜராத்தில் கலோரெக்ஸ் என்ற பெயரில் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் மஞ்சுளா பூஜா ஷெராப், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு வந்திருந்தபோது பிடதி ஆசிரமத்தில் நித்தியானந்தாவை சந்தித்துள்ளார்.  இச்சந்திப்பிற்கு பின்னர் நித்தியானந்தாவின் தீவிர பக்தை ஆகிவிட்டார் மஞ்சுளா.  இதை பயன்படுத்திக்கொண்ட நித்தியானந்தா, அகமதாபாத்தில் ஆசிரமம் அமைக்க வேண்டும் என்று சொல்ல, மஞ்சுளாவும் தனது பள்ளி வளாகத்திலேயே ஆசிரமம் அமைத்துக்கொடுத்திருக்கிறார்.  பிடதி ஆசிரமத்தில் சர்ச்சைகள் ஆரம்பித்தபோது அங்கிருந்து வெளியேறிய நித்தியானந்தா இந்த அகமதாபாத் ஆசிரமத்தில்தான் இருந்ததாகவும், ஜனார்த்த சர்மாமவின் மூலம் பிரச்சனை பெரிதானதால், அந்த ஆசிரமத்தில் இருந்தும் வெளியேறிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

 

p

 

ஆசிரமத்திற்கு இடம் கொடுத்ததோடு அல்லாமல், நித்தியானந்தா கைலாசா எனும் தனி நாடு உருவாக்குவதற்கும் பலகோடிகள் நிதியுதவி செய்துள்ளாராம் மஞ்சுளா.  

 

நித்தியானந்தா விவகாரம் பரபரப்பாகிவிட்ட நிலையில், அகமதாபாத்தில் ஆசிரமத்திற்கு வழங்கிய இடம் சட்டத்திற்கு புறம்பான இடம் என்று குஜராத் போலீசார் மஞ்சுளா வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் நித்தியானந்தா குறித்து அவரிடம் விசாரிக்க முடிவு செய்திருந்தனர். ஆனால்,  இந்த வழக்கில் மஞ்சுளா முன் ஜாமீன் பெற்றுவிட்டாலும், அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க, அவரது பாஸ்போர்ட்டை போலீசார் முடக்கியுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடர் சர்ச்சையில் பாஸ்கரானந்தா; பழங்கால முருகன் சிலை பறிமுதல்

Published on 08/11/2022 | Edited on 08/11/2022

 

Bhaskarananda in serial controversy; Seizure of ancient Murugan idol

 

கடந்த சில மாதங்களுக்கு முன் தனது ஆசிரமத்தை இடித்து விட்டார்கள் எனக் கூறி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார் பாஸ்கரானந்தா. பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்த அவர், நான் தான் நித்தியானந்தா என நினைத்து என் ஆசிரமத்தை இடித்துவிட்டனர் என்றும் கூறினார். 

 

இந்நிலையில், கடந்த சில நாட்களாகச் சிலைகள் அதிக அளவில் கடத்தப்படுவதாகவும் வெளிநாடுகளில் அவை அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளது. காவல்துறையினருக்கு வந்த புகாரின் அடிப்படையில் கோவை பாஸ்கரானந்தா சாமியார் வீட்டில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டனர். 

 

3 மணி நேரத்திற்கும் மேல் நீண்ட இந்த சோதனையில் 200 கிலோவிற்கும் அதிகமான எடையுடன் 4 அடி உயரம் கொண்ட ஐம்பொன் முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது. சிலை வைத்திருப்பதற்கான சரியான ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் காவல்துறையினர் அதனைக் கைப்பற்றிச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். 

 

கும்பகோணம் சிறப்பு கோர்ட்டில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சிலையை ஒப்படைத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகப் பிரியா சிலையின் தொன்மையினை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள உலோகச்சிலைகள் பாதுகாப்பு மையத்தில் அந்தச் சிலை ஒப்படைக்கப்பட்டது.

 

 

Next Story

“எனக்கு வாழ்வாதாரம் போச்சு..திருவோடு வாங்கி கொடுங்க பிச்சை எடுக்குறேன்” ஆசிரமத்தை இடித்ததாக புகாரளித்த பாஸ்கரானந்தா

Published on 07/10/2022 | Edited on 07/10/2022

 

baskaraanadha cry for his aashrama

 

 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கர்ணம்பேட்டை பகுதியில் செல்வக்குமார் என்பவரது இடத்தில் பாஸ்கரானந்தா என்பவர் ஆசிரமம் ஒன்றை கட்டி வருகிறார். வெளியூரில் இருந்த பாஸ்கரானந்தாவிற்கு ஆசிரம கட்டிடம் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. 

 

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர் தனது ஆசிரமம் தரைமட்டமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து பல்லடம் காவல்நிலையத்திற்கு தனது பக்தர்களுடன் சென்று புகாரளித்தார். மேலும் நித்தியானந்தா என நினைத்து என் ஆசிரமத்தை இடித்துவிட்டனர் என்றும் கூறியுள்ளார்.

 

இந்நிலையில் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வந்த பாஸ்கரானந்தா வாகனங்களில் ஏராளமான பக்தர்களை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட காவல் துறை உயர் அதிகாரி எச்சரித்துள்ளார். அவரிடம் பேசிய பாஸ்கரானந்தா, “ஐயா நான் நாலு நாளா சாப்பிடலங்கையா. நான் போய் பிச்சை எடுக்கிறதா. திருவோடு வாங்கி கொடுங்க பிச்சை எடுக்குறேன். நான் இததான் கேட்க முடியும்.

 

எனக்கு வாழ்வாதாரம் போச்சு. என் மனநிலைல இருந்து கொஞ்சம் யோசிச்சு பாருங்க. என் உயிர் போறதுக்குள்ள நீங்க காப்பாத்துறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க. நான் காவல்துறைய நம்பி வந்துருக்கேன். தயவு செஞ்சி ஆன்மீகத்துல இருக்குறவன ரோட்ல நின்னு அழுக வைக்காதீங்க” எனக் அழுதுகொண்டே கூறும் காட்சி இணையத்தில் பரவி வருகிறது.