Advertisment

பொங்கல் திருநாள்; தமிழ் மொழியில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

Pongal festival; Prime Minister Modi congratulated in Tamil language

Advertisment

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரதமர் மோடி தனது பொங்கல் வாழ்த்துகளைத்தமிழ் மொழியில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “அறுவடையைக் கொண்டாடும் இந்த பண்டிகை புதிய நம்பிக்கைகளையும் புதிய தொடக்கங்களையும் கொண்டு வரட்டும். இது புதிய விருப்பங்களை ஒளிரச் செய்து மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

pongal modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe