புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ளது தனியார் (வேலு) ஒயின்ஸ் என்கிற மதுபான கடை. இந்த கடை நேற்று இரவு 10.00 மணிக்கு மூடப்பட்டு இன்று (26/09/2019) காலை வழக்கம்போல் 10.00 மணிக்கு திறக்கப்பட்டது. அப்போது கல்லாப்பெட்டி திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ந்த ஊழியர் சோதனை செய்தபோது, அதில் இருந்த 60 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அதை தொடர்ந்து மது பாட்டில்களை ஆய்வு செய்த போது விலை உயர்ந்த மது பாட்டில்களும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. அதேசமயம் கடை பீரோவில் இருந்த 2 லட்சம் பணம் கொள்ளை அடிக்காமல் தப்பியது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.