Skip to main content

பிரான்ஸ் அணி வென்றதை புதுச்சேரி மக்களே வென்றது போல உணர்கிறார்கள்: நாராயணசாமி பெருமிதம்!

Published on 16/07/2018 | Edited on 16/07/2018
fifa


 

 

’உலக கோப்பை கால்பந்தாட்டத்தில் பிரான்ஸ் அணி வென்றது புதுச்சேரி மக்களே வென்றது போல உணர்கிறார்கள்’ என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

21வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 14-ஆம் தேதி ரஷ்யாவில் தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் ஐரோப்பிய அணிகளான பிரான்சும், குரோஷியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இப்போட்டி நேற்று இரவு 8.30 மணிக்கு துவங்கி 10.30 மணிக்கு நிறைவடைந்தது. இதில் குரேஷிய அணியை 4-2 என கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வீழ்த்தி 2வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.
  fifa


இப்போட்டியை புதுச்சேரி கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் காணும் வகையில், சுற்றுலாத்துறை சார்பில் லே கபே உணவகத்தின் மாடியில் பிரமாண்ட எல்இடி திரை அமைக்கப்பட்டு இறுதிப்போட்டி ஒளிபரப்பப்பட்டது.

இதனை முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, ஐஜி சுரேந்தர சிங் யாதவ் மற்றும் வெளிநாடு, வெளி மாநில சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.

இப்போட்டியில் பிரான்ஸ் வெற்றி பெற்றதை அடுத்து அவர்கள் உற்சமாக குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பிரான்ஸ் அணி வெற்றி பெற்ற பின்பு முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது "புதுச்சேரி பிரெஞ்சு காலனியின் கீழ் இருந்த பகுதியாகும். பிரான்சுக்கும் நமக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. புதுச்சேரியை சேர்ந்தவர்கள் நிறைய பேர் பிரான்ஸில் வேலை செய்கின்றனர்.
 

fifa


இந்நிலையில் கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் பிரான்ஸ் வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் கூறியிருந்தேன். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. உலகக்கோப்பையை வென்ற பிரான்ஸ் கால்பந்து அணி வீரர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இறுதி போட்டியில் பிரான்ஸ் வெற்றி பெற்றது, புதுச்சேரி மாநில மக்களுக்கு அவர்களே வெற்றி பெற்றது போல் உள்ளது" என்று தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கும் 34 வயது இளைஞர்!

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
A 34-year-old youth will take over as the new Prime Minister of France

பிரான்ஸ் நாட்டில், கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற இமானுவேல் மேக்ரான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 46 வயதான இமானுவேல் மேக்ரானின் பதவிக் காலம் 2027 ஆம் ஆண்டு வரை உள்ளது. பிரான்ஸ் அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிபர், பிரதமரை நியமிக்கும் அதிகாரத்தைப் பெற்றவர். அதன்படி, பிரான்ஸ் நாட்டின் பிரதமராகக் கடந்த 2022 ஆம் ஆண்டு எலிசபெத் போர்ன் என்ற பெண் பதவியேற்றார். இவர் நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து, அரசு கொண்டு வந்த ஓய்வூதிய கொள்கைகள், குடியேற்றச் சட்டங்கள் ஆகியவற்றை எதிர்த்து இமானுவேல் மேக்ரானுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அதுமட்டுமல்லாமல், அரசு கொண்டு வந்த சட்டங்கள் தொடர்பான விவகாரங்களில் அரசுக்கும் கட்சிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இதன் எதிரொலியாக, பிரான்ஸில் நடைபெற்ற இடைத் தேர்தலில் மேக்ரான் அரசு தோல்வி அடைந்தது. இதனால், நாடாளுமன்றத்தில் மேக்ரான் அரசு பெரும்பான்மையை இழந்தது. 

இந்த நிலையில், பிரதமர் எலிசபெத் போர்ன் திடீரென தனது பதவியை நேற்று முன்தினம் (08-01-24) ராஜினாமா செய்தார். பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற சிறப்பை பெற்ற எலிசபெத் போர்ன், 2 ஆண்டுகளுக்கும் குறைவாகவே அப்பதவியை வகித்துள்ளார். எலிசபெத் போர்ன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததால், பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டல் (34) பெயரை அதிபர் இமானுவேல் மேக்ரான் நேற்று (09-01-24) அறிவித்தார். 

பிரான்ஸ் நாட்டின் இளம் வயது பிரதமராகப் பொறுப்பேற்கும் கேப்ரியல் அட்டல், தன்னை வெளிப்படையாக தன்பாலீர்ப்பாளராக அறிவித்துக்கொண்டவர். மேலும், நாட்டின் முதல் தன்பாலீர்ப்பாளர் பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் கேப்ரியல், 2020 ஆம் ஆண்டு முதல் 2022 வரை அரசின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றியுள்ளார். முன்பு, பொதுவுடைமை கட்சியில் இருந்த கேப்ரியல், 2016 ஆம் ஆண்டில் மேக்ரான் தொடங்கிய அரசியல் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

கடத்தல் புகார்; தரையிறக்கப்பட்ட விமானம் இந்தியா வந்தது!

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
Landed plane arrived in India from france

300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் துபாயில் இருந்து தனியார் விமானத்தை பிரத்யேகமாக வாடகைக்கு எடுத்து நிகரகுவா என்ற நாட்டுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். அதன்படி, துபாயில் இருந்து 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நிகரகுவா நாட்டுக்கு சென்ற விமானம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள கிழக்கு வாட்ரி நகர விமான நிலையத்தில் எரி பொருள் நிரப்ப நிறுத்தப்பட்டது.

பெரும்பாலான இந்தியர்கள் பயணித்த அந்த விமானத்தில், ஆள்கடத்தல் நடைபெறுவதாக பிரான்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலில் அடிப்படையில், அந்த விமானம் நிகரகுவா நாட்டுக்கு புறப்பட பிரான்ஸ் அதிகாரிகள் தடை விதித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், விமானத்தில் பயணித்த இந்தியர்களில் சிலர் தமிழ் பேசுவதாக விசாரணையில் தகவல் வெளியாகியிருந்தது. 

மேலும், அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களா அல்லது இலங்கையை சேர்ந்தவர்களா என தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இது மட்டுமின்றி விமானத்தில்  பயணம் செய்த பெரும்பாலானோர் இந்தி உள்ளிட்ட வட மாநில மொழிகளை பேசுவதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியின. இதையடுத்து, அந்த விமானத்துக்கு அந்நாட்டு காவல்துறை சீல் வைத்து, பயணிகள் அனைவரையும் விமான நிலைய கட்டடத்தில் தங்கவைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், காவல்துறை விசாரணையில் விமான பயணிகள் உரிய அனுமதி பெற்றதும், மனித கடத்தல் இல்லை என்றும் தெரியவந்தது. இதனையடுத்து, 4 நாள் விசாரணைக்கு பின் பிரான்ஸில் தரையிறக்கப்பட்ட விமானம் இன்று (26-12-23) காலை இந்தியா வந்தடைந்தது.