Skip to main content

ஆறு ஆண்டுகளில் மூன்று கட்சிகளுக்கு தாவிய அரசியல் பிரமுகர்... யார் அவர்?- விரிவாகப் பார்ப்போம்!

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

Political figure who jumped to three parties in six years ... Who is he? - Let's see in detail!

 

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆறு ஆண்டுகளில் மூன்று கட்சிகள் தாவி ஒருமுறை தனிக்கட்சிக் கண்ட அரசியல் பிரமுகர், தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில் பா.ஜ.க.வில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார். 

 

உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைக்கு ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுவாமி பிரசாத் மௌரியா. இவர் தொடக்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தார். 1997 மற்றும் 2002, 2007 ஆம் ஆண்டுகளில் மாயாவதி தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்தார். கடந்த 2016- ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின், சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 

 

ஆனால், 2017- ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்பு பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி, லோக்தந்திரி பகுஜன் மஞ்ச் என்ற பெயரில் தனிக்கட்சியைத் தொடங்கி, மாயாவதிக்கு எதிராக செயல்பட்டு தனிக்கவனத்தை ஈர்த்தார். 

 

2017- ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தபோது, அந்த கட்சியின் தன்னை இணைத்துக் கொண்டார் சுவாமி பிரசாத் மௌரியா. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் இவருக்கு தொழிலாளர் நலத்துறை இலாக்கா வழங்கப்பட்டது. 


இந்த நிலையில், உத்தரபிரதேச தேர்தல் அறிவிப்பு வெளியான சில தினங்களில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு, பா.ஜ.க.வில் இருந்து விலகியுள்ளார். தற்போது, பா.ஜ.க.வுக்கு நெருக்கடி தரும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் சுவாமி பிரசாத் மௌரியா இணைந்துள்ளார். 

 

ஐந்து ஆண்டுகளாக அமைச்சராக இருந்த அவர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கும், பட்டியலினத்தவருக்கும் யோகி ஆதித்யநாத் அரசு, எந்த திட்டத்தையும் செயல்படுத்தப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். 

 

எனினும், இவரின் மகள் சங்கமித்ரா மௌரியா, பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினராக நீடித்து வருகிறார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைபிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.