ADVERTISEMENT

போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு!

08:25 AM Jan 10, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

நாடு முழுவதும் ஜனவரி 17- ஆம் தேதி நடக்கவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக அனைத்து மாநில சுகாதாரத்துறைக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், "நாடு முழுவதும் ஜனவரி 17- ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் நடக்கவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்படுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16- ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதால், போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT