Skip to main content

விதிமுறைகளை மீறியதால் வன்முறை - விவசாய தலைவர்கள் மீது டெல்லி காவல்துறை குற்றச்சாட்டு!

Published on 28/01/2021 | Edited on 28/01/2021

 

police commissioner

 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் நடத்திய ட்ராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. செங்கோட்டையில் சீக்கியர்களின் புனிதக் கொடி ஏற்றப்பட்டது.

 

இந்த வன்முறை குறித்து விளக்கமளித்த டில்லி காவல்துறை ஆணையர், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பின்பற்றப்படாததால் வன்முறை நிகழ்ந்தது என்றும் வன்முறைக்கு காரணமான ஒரு குற்றவாளியும் காப்பாற்றப்பட மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

 

இதுகுறித்து அவர், "டெல்லி மக்களின் பாதுகாப்பின் நலன்களை மனதில் கொண்டு, சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 5000 க்கு அதிகமாக ட்ராக்டர்கள் (பேரணியில்) இருக்கக்கூடாது என்றும் அவர்களிடம் ஆயுதம் இருக்கக்கூடாது என்றும் அவர்களுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவுறுத்தப்பட்டது. ஜனவரி 25 மாலை, விவசாயிகள் தங்கள் வார்த்தைகளைக் கடைபிடிக்கவில்லை என்பது தெரியவந்தது. மேடையை ஆக்கிரமித்து ஆத்திரமூட்டும் உரைகளை அவர்கள் முன்வைத்தனர். இது அவர்களின் நோக்கங்களைத் தெளிவுபடுத்தியது.

 

வன்முறையில் 394 காவல்துறை பணியாளர்கள் காயமடைந்தனர். அவர்களில் பலர் இன்னும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் ஐ.சி.யூ வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி காவல்துறையால் 25 க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முக அடையாளம் காணும் முறையைப் (facial recognition) பயன்படுத்துகிறோம். குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண சி.சி.டி.வி மற்றும் வீடியோ காட்சிகளை ஆராய்ந்து வருகிறோம். எந்த குற்றவாளியும் காப்பாற்றப்பட மாட்டார். குற்றம் சாட்டப்பட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு 50 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்.

 

ஒப்பந்தத்தின்படி, பேரணி அமைதியாக முடிவடைய வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பின்பற்றப்படாததால் வன்முறை நிகழ்ந்தது. விவசாயத் தலைவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்" எனக் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமி பாலியல் வன்கொடுமை?; டெல்லியில் பரபரப்பு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
4 years old girl child inciedent in delhi

டெல்லியில் டியூஷன் சென்டர் ஒன்றில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறி பாண்டவ் நகர் பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து டெல்லி கிழக்கு சரக கூடுதல் காவம் ஆணையர் சாகர் சிங் கல்சி கூறுகையில், “ 4 வயது சிறுமி ஒருவர் டியூஷன் படிக்கும் இடத்தில் 34 வயது மதிக்கத்தக்க நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக நேற்று (23.03.2024) மண்டவாலி காவல்நிலையத்திற்கு புகார் ஒன்று வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இந்த பகுதியில் வதந்தி பரவியதால் மக்கள் திரண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அமைதியான சூழலை ஏற்படுத்தினர். பாதிக்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாக இருக்கிறது” எனத் தெரிவித்தனர்.

மேலும் டெல்லி கிழக்கு போலீஸ் டிசிபி அபூர்வ குப்தா கூறுகையில், “சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வதந்தி பரப்பப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. அவளது உடல்நிலை சீராக உள்ளது. இந்த வழக்கு குறித்த அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை முடிந்துவிட்டது. மருத்துவ ஆலோசகரிடம் நன்றாகப் பேசுகிறார். ஒரு சிலர் உள்நோக்கத்தோடும் பரப்பும் பொய்யான தகவல்களை நம்பி தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

“அனைவரும் ஒன்றுபட வேண்டும்” - விவசாயிகளுக்கு ஆதரவாக காலா பட நடிகர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nane patekar about farmers

இந்தி மற்றும் மராத்தியில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நானா படேகர். கடைசியாக தி வேக்ஸின் வார் படத்தில் நடித்திருந்தார். தமிழில் ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது ஜேர்னி (Journey) என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மற்றொரு மராத்தி நடிகரான மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து ‘நாம்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில், நாசிக்கில் நடைபெற்ற ஷேத்காரி சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “விவசாயிகள் நல்ல நேரத்துக்காகக் காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டு வர வேண்டும். 

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தங்கம் விலை உயரும்போது, அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால் அவர்களின் குறைகளை தீர்க்க அரசுக்கு நேரமில்லை. இதுபோன்ற அரசிடம் விவசாயிகள் எதையும் கோர வேண்டாம். எந்த மாதிரியான இலட்சியத்தை இளம் தலைமுறைக்கு முன் வைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நான் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால் என்னால் அரசியலில் சேர முடியாது. தற்போதைய நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றார்.