police commissioner

மத்திய அரசின்வேளாண்சட்டங்களுக்கு எதிராகபோராடி வரும் விவசாயிகள் நடத்தியட்ராக்டர்பேரணியில் வன்முறை வெடித்தது. செங்கோட்டையில் சீக்கியர்களின் புனிதக் கொடி ஏற்றப்பட்டது.

Advertisment

இந்த வன்முறை குறித்துவிளக்கமளித்த டில்லிகாவல்துறை ஆணையர், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பின்பற்றப்படாததால் வன்முறை நிகழ்ந்ததுஎன்றும் வன்முறைக்கு காரணமானஒரு குற்றவாளியும் காப்பாற்றப்பட மாட்டார்கள் என்றும்கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர், "டெல்லி மக்களின் பாதுகாப்பின் நலன்களை மனதில் கொண்டு, சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.5000 க்குஅதிகமாக ட்ராக்டர்கள் (பேரணியில்) இருக்கக்கூடாது என்றும் அவர்களிடம் ஆயுதம் இருக்கக்கூடாது என்றும் அவர்களுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவுறுத்தப்பட்டது.ஜனவரி 25 மாலை, விவசாயிகள் தங்கள் வார்த்தைகளைக் கடைபிடிக்கவில்லை என்பதுதெரியவந்தது. மேடையை ஆக்கிரமித்து ஆத்திரமூட்டும் உரைகளை அவர்கள் முன்வைத்தனர்.இது அவர்களின் நோக்கங்களைத் தெளிவுபடுத்தியது.

Advertisment

வன்முறையில் 394 காவல்துறைபணியாளர்கள் காயமடைந்தனர். அவர்களில் பலர் இன்னும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் ஐ.சி.யூ வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.டெல்லிகாவல்துறையால் 25 க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முக அடையாளம் காணும் முறையைப்(facialrecognition)பயன்படுத்துகிறோம்.குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண சி.சி.டி.வி மற்றும் வீடியோ காட்சிகளை ஆராய்ந்து வருகிறோம். எந்தகுற்றவாளியும் காப்பாற்றப்பட மாட்டார். குற்றம் சாட்டப்பட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு 50 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்.

ஒப்பந்தத்தின்படி, பேரணி அமைதியாக முடிவடைய வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பின்பற்றப்படாததால் வன்முறை நிகழ்ந்தது. விவசாயத் தலைவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்" எனக் கூறியுள்ளார்.