dad salutes daughter

ஒரு துறையில்,உயர் பதவியில்இருக்கும்மகளுக்கோ அல்லது மகனுக்கோ, அதேதுறையில் சாதாரணநிலையில் இருக்கும் தந்தை வணக்கம் செலுத்துவதை சினிமாவிலும், விளம்பரத்திலும் பார்த்திருப்போம். அப்படி ஒரு சம்பவம்ஆந்திரமாநிலத்தில் உண்மையாகவே நடந்துள்ளது.

Advertisment

ஆந்திரா மாநிலத்தில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் ஒய் ஷியாம் சுந்தர். இவரது மகள் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தி, 2018-ல் நடந்த காவலர் தேர்வில் வெற்றிபெற்று துணை போலீஸ் சூப்பிரண்டாகப் பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில், திருப்பதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு பிரசாந்திவருகை தந்தார். அப்போது அங்கிருந்த ஷியாம் சுந்தர், தன் துறையில்தன்னை விட உயர் பொறுப்பில் இருக்கும் தனதுமகளுக்குசல்யூட்அடித்தார்.

Advertisment

காவல்துறை அதிகாரி, தன் மகளுக்கு சல்யூட் அடித்தது, காண்போரை நெகிழச் செய்தது. மேலும், இந்தச் சம்பவம்சமூகவலைதளங்களில் வைரலானது. இதுதொடர்பாகபிரசாந்தி, தனதுதந்தைதான் தனக்கு ரோல்மாடல்எனவும், அவர் தனக்குசல்யூட் அடித்தபோது தர்மசங்கடமாக இருந்ததுஎனவும்தெரிவித்துள்ளார்.