ஆந்திராவில் பழமையான சிவன் கோவிலில்மூவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Police are investigating andra shivan temple!

ஆந்திரம் மாநிலம் அனந்தபுரத்தை அடுத்தகொத்திக்கோட்டா பகுதியில் உள்ள ஒரு பழைமையான சிவன் கோவிலில் சிவராம் அவரது சகோதரி கமலம்மாள் மற்றும் அவருடன் தங்கியிருந்த பெங்களூருவை சேர்ந்த லக்சுமியம்மாள் என மூவர் தலைதுண்டிக்கப்பட்ட நிலையில்கொலை செய்யப்பட்டு கோவிலின் அருகே கிடந்துள்ளனர். இந்த சம்பவத்தில் அவர்களது ரத்தம் அந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீதும், கோவில் வளாகத்திலும்தெளிக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Police are investigating andra shivan temple!

புதையலுக்காக மூவரும் நரபலி கொடுக்கப்பட்டார்களா என்ற கோணத்தில்போலீசார் விசாரித்து வருகின்றனர். சிவராமும், கமலம்மாளும் அந்த கோவிலின் அருகே வசித்து வந்தவர்கள் என்பதும், அந்த கோவிலில் இருவரும் பூஜை செய்யும் பணிகளில் ஈடுபட்டிருத்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.