Skip to main content

பி.எம் நரேந்திரமோடி திரைப்படம் 38 நாடுகளில் வெளியாகிறது !

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை குறிப்பிடும் வகையில் "பிஎம்.நரேந்திரமோடி" என்னும் பெயரில் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் பாலிவுட் முன்னணி நடிகரான விவேக் ஓப்ராய் அவர்கள் பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஓமங்க் குமார் இயக்கியுள்ளார். இந்த திரைப்படமானது ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பாளர்களின் ஒருவரான "பண்டித்" அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா , கனடா உள்ளிட்ட 38 நாடுகளில் சுமார் 1700 திரையரகங்களில் திரைப்படம் வெளியாகும் எனவும் , இந்தியாவில் மட்டும் சுமார் 600 திரையரகங்களில் வெளியாக உள்ளது என தெரிவித்தார். மேலும் ஆங்கிலம் , ஹந்தி , தெலுங்கு உட்பட 23 மொழிகளில் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

 

pm.modi



உச்சநீதிமன்றத்தில் பிஎம் நரேந்திரமோடி படத்திற்கு எதிராக வழக்கு !

உச்சநீதிமன்றத்தில் பிஎம் நரேந்திரமோடி படத்தின் வெளியீட்டிற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளானர். இதற்கு முன்பு தேர்தல் ஆணையத்தில் முறையீட்ட எதிர்கட்சிகள் படத்தை வெளியீட எவ்வித தடையும் இல்லை என தெரிவித்ததை அடுத்து , எதிர்கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாடியது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று (08/04/2019) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களின் தலைமையிலான அமர்வு முன் வருகிறது. அதே போல் படத்தின் வெளியீட்டு தேதியை படத்தயாரிப்பு நிறுவனம் இரண்டு முறை மாற்றி தற்போது ஏப்ரல் 11 ஆம் தேதி உலக முழுவதும் வெளியாகும் என தெரிவித்துள்ளது. 

 

pm.modi



இந்நிலையில் இப்படத்தின் நடிகரான விவேக் ஓப்ராய் தனது டிவிட்டர் பக்கத்தில் ஏப்ரல் 11 ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என்பது குறித்த போஸ்டரை வெளியிட்டார். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த திரைப்படம் தொடர்பான வழக்கு இன்று (08/04/2019) விசாரணைக்கு வரவுள்ளதால் பட வெளியீட்டு தேதி மாற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைப்பெற உள்ளது. இதன் தொடர்ச்சியாக முதற்கட்ட மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைப்பெற உள்ளது. இந்த திரைப்பட வெளியீட்டிற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் படம் வெளியீட்டு தேதியை மாற்றம் செய்ய படத்தயாரிப்பாளர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


பி.சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் இல்லம் முற்றுகை; ஆம் ஆத்மியினர் குண்டுக்கட்டாக கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Siege of Prime Minister's House; Aam Aadmi Party Arrested for Bombing

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை ஆம் ஆத்மி கட்சியினர் எடுத்து வருகின்றனர்.

தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியினர்  முற்பட்டனர். ஆனால் காவல்துறை சார்பில் அதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தடையை மீறி பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பாக உள்ளது.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.