ADVERTISEMENT
ADVERTISEMENT
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிக்கை கொண்டாடப்பட்டுவருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளையும் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டு தீபாவளியை கொண்டாடிவருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்களும் மக்களுக்கு தங்களின் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,‘தீபாவளி திருநாளில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள். இந்த தீபத்திருவிழா உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், செழிப்பையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்’ எனப் பதிவிட்டுள்ளார்.
Show comments