Skip to main content

மத்திய அமைச்சரவையில் மாற்றம்; பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

Published on 06/07/2021 | Edited on 06/07/2021

 

 

PM NARENDRA MODI UNION CABINET MINISTERS MEETING

 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நாளை மறுநாள் (08/07/2021) விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதில் ஜோதிராதித்ய சிந்தியா, சோனாவால், நாராயணன் ரானே உள்ளிட்டோர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், மத்திய அமைச்சரவையில் பல புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில், டெல்லியில்  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை (07/07/2021) காலை 11.00 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜவடேகர், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

 

கூட்டத்தில் நிலுவையில் உள்ள பரிந்துரைகள் குறித்தும், மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் கூறுகின்றன. மேலும், மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் பெறவுள்ளவர்களின் பெயர் பட்டியல், பல்வேறு விவகாரங்கள் குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

 

மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கர்நாடக மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில், மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Union Cabinet meeting chaired by Prime Minister Modi

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (31-01-2024) தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது.

அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று (01-02-2024) மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டு ஆறாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். மேலும் இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், பல்வேறு சலுகைகள் அளிப்பது பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்னும் சற்று நேரத்தில் நாடாளுமன்ற மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த சூழலில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. இதற்காக மத்திய அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

Next Story

முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்!

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Cabinet meeting under the leadership of the Chief Minister stalin  today

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. காலை 11 மணிக்கு தொடங்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மற்றும் ஆளுநர் உரை குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின் வரும் 28 ஆம் தேதி வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ள நிலையில், தமிழகத்தில் சில தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. அதற்கு அனுமதி அளிப்பது குறித்தும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் மற்றும் துறை அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.