Skip to main content

திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

PM NARENDRA MODI SPEECH WITH JIPMER AT PUDUCHERRY

 

புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய விழுப்புரம் - நாகை இடையே ரூபாய் 2,426 கோடி மதிப்பில் 56 கி.மீ. தூரம் அமையும் நான்கு வழிச்சாலைப் பணிக்கு (NH45A) காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார்.

PM NARENDRA MODI SPEECH WITH JIPMER AT PUDUCHERRY

 

அதேபோல், ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் காரைக்கால் கிளையில் ரூபாய் 491 கோடி மதிப்பிலான புதிய கட்டடத்திற்கும், சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூபாய் 44 கோடியில் அமையவுள்ள சிறிய துறைமுகத்திற்கும், இந்திரா காந்தி விளையாட்டுத் திடலில் ரூபாய் 7 கோடியில் செயற்கை ஓடுதளம் அமைக்கவும் அடிக்கல் நாட்டிய பிரதமர், ஜிப்மரில் ரூபாய் 28 கோடியில் ஆராய்ச்சிக் கூடத்துடன் கூடிய ரத்த வங்கியையும், லாஸ்பேட்டையில் ரூபாய் 12 கோடியில் 100 படுக்கைகளுடன் கூடிய வீராங்கனைகளுக்கான விடுதியையும் காணொளி மூலம் திறந்து வைத்தார். மேலும், புதுச்சேரியில் ரூபாய் 15 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாரம்பரிய மேரி கட்டடத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். புதுச்சேரி வரலாற்றின் அடையாளமான மேரி கட்டடம் பிரெஞ்ச் கட்டட கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை (பொறுப்பு) ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

PM NARENDRA MODI SPEECH WITH JIPMER AT PUDUCHERRY

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "புதுச்சேரியில் வாழும் மக்கள் பல மொழிகளைப் பேசினாலும் ஒற்றுமையின் அடையாளமாக திகழ்கின்றனர். புதுச்சேரி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. காரைக்கால் - நாகை தேசிய நெடுஞ்சாலை மும்மதங்களின் முக்கியத் தளங்களை இணைக்கும். புதிய நான்கு வழிச்சாலை, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். கிராமப்புற, கடற்கரை இணைப்பை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

PM NARENDRA MODI SPEECH WITH JIPMER AT PUDUCHERRY

 

புதுச்சேரி மண் பன்முகத்தன்மையின் அடையாளம்; இங்கிருந்து பல்வேறு புரட்சியாளர்கள் வந்துள்ளனர். புதுச்சேரியின் புனிதத்தன்மை என்னை மீண்டும் இங்கே அழைத்து வந்திருக்கிறது. புதிய நான்கு வழிச்சாலை மூலம் காரைக்கால் மாவட்டத்தில் பொருளாதாரம் மேம்படும். நான்கு வழிச்சாலையால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில், வேளாங்கண்ணி பேராலயத்திற்கு எளிதாகச் செல்லலாம். சுகாதாரத்துறையில் முதலீடு செய்யும் நாடுகள் பிரகாசிக்கும். சுகாதாரத்துறைக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. புதுச்சேரிக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்" என்றார். 

PM NARENDRA MODI SPEECH WITH JIPMER AT PUDUCHERRY

 

அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர், "மாணவர்களுக்கு கல்விதான் சிறந்த செல்வம்" என்பதற்கு 'கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை' என்ற திருக்குறளை மேற்கோள்காட்டினார்.

 

இதனிடையே, புதுச்சேரியில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக்கொடி காட்டி, கருப்பு பலூன் பறக்கவிட்ட சுமார் 30 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.