Skip to main content

அதிகரிக்கும் கரோனா: பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!

Published on 17/04/2021 | Edited on 17/04/2021

 

PM NARENDRA MODI DISCUSSION WITH MINISTRIES HIGHER OFFICERS

 

இந்தியாவில் தமிழ்நாடு, டெல்லி, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் மத்திய உள்துறை அமைச்சகமும் அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.

 

குறிப்பாக, பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, முழு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; பொது இடங்களில் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்; அடிக்கடி சோப்பு (அல்லது) கிருமிநாசினி கொண்டு கைகளைக் கழுவ வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது வழங்கி வருகின்றன. 

 

இருப்பினும் இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், டெல்லியில் இருந்தவாறே பிரதமர் நரேந்திர மோடி இன்று (17/04/2021) இரவு 08.00 மணி முதல் காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். பிரதமர் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனையில் பல்வேறு மத்திய அமைச்சகங்களில் உள்ள உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 

 

கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு உள்ளதாக பல்வேறு மாநில அரசுகள் கூறியுள்ள நிலையில், பிரதமரின் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்