pm narendra modi discussion with governors coronavirus issues

Advertisment

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அவ்வப்போது அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக அனைத்து மாநில, யூனியன் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி இருந்தார். இந்த நிலையில், இன்று (14/04/2021) மாலை அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர் காணொளி மூலம்ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்றுள்ளார்.

இந்த ஆலோசனையில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆளுநர்களுடன் கேட்டறியும் பிரதமர், பின்பு முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல் கூறுகின்றன.