அதே போல் பாஜகவினர் ஆர்எஸ்எஸ் சட்ட பிரமாணங்கள் மற்றும் அரசியல் சாசன பிரமாணங்கள் என இரண்டையும் எடுத்துக் கொள்வதாகவும். இதில் சில நேரங்களில் எதைப் பயன்படுத்துவது என்று பாஜகவினர்களுக்கு தெரியாமல் போய் விடுவதாக அகிலேஷ் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில் இந்தியாவின் அடுத்த பிரதமர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என அகிலேஷ் கூறினார்.கடந்த கால மக்களவை வரலாற்றை திரும்பிப் பார்த்தோமே ஆனால் உத்தரபிரதேச சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் யாருக்கு ஆதரவோ அவர்களே பிரதமர் ஆகின்றனர். இதற்கு காரணம் இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமாக உள்ள உத்தரபிரதேச மாநிலம் சுமார் 80 மக்களவை தொகுதிகளைக் கொண்டுள்ளது. இதில் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தான் பிரதமராக பதவி ஏற்க தயார் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . இதை மையமாக வைத்தே அகிலேஷ் தங்கள் மாநிலத்தில் இருந்து அடுத்த பிரதமர் என்ற செய்தியை வெளியிட்டுள்ளார்.