சிவசேனா கட்சியின் நிறுவனரான பால்தாக்கரேவின் பிறந்த நாளை, இன்று அவரது தொண்டர்கள் மகாராஷ்டிராவில் கொண்டாடி வருகின்றனர். மகாராஷ்டிரா அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக விளங்கிய பால்தாக்கரேவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

modi

Advertisment

Advertisment

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், "பால் தாக்கரேவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர் தைரியமானவர். அவர் யாராலும் வீழ்த்த முடியாத தலைவர். பொதுமக்களின் பிரச்னை குறித்து கேள்வி எழுப்ப அவர் எப்போதும் தயங்கியது இல்லை" என்று கருத்து தெரிவித்துள்ளார்.

— Narendra Modi (@narendramodi) January 23, 2020

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.