Skip to main content

ட்ரம்புடன் ஏப்ரல் 4ஆம் தேதி பேசியதே கடைசி; தற்போது மோடியுடன் பேசியதாக, அவர் கூறுவதில் உண்மையில்லை - வெளியுறவுத்துறை விளக்கம்!

Published on 29/05/2020 | Edited on 29/05/2020

 

xc


இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகப்படியாக இருந்து வரும் நிலையில் லடாக் பகுதியில் சீனா அத்துமீறி ராணுவ வீரர்களை அனுப்பி வருகின்றது. எல்லையில் அமைதியைக் குலைக்கும் விதமாக அதன் நடவடிக்கைகள் தொடர்ந்து இருந்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் ட்ரம்ப், "இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே பெரிய மோதல் நடந்து வருகின்றது. இருநாடுகளுக்கு இடையே சமரசம் செய்ய நாங்கள் தயாராக இருக்கின்றோம். இதுதொடர்பாக இந்தியப் பிரதமருடன் நான் பேசினேன். அவர் நல்ல மனநிலையில் இல்லை" என்று தெரிவித்திருந்தார்.
 


இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் சமீப காலமாக பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையே எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்றும், கடைசியாக இருவரும் ஏப்ரல் 4 ஆம் தேதி பேசினார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். எதற்காக ட்ரம்ப் இவ்வாறு கூறினார் என்று தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அமெரிக்க அரசின் ஆவணங்களை மறைத்து வைத்த ட்ரம்ப்! 

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

Trump hide US government documents

 

அமெரிக்க அரசின் முக்கிய ஆவணங்களை நாளேடுகள் பத்திரிகைகள் மற்றும் தனிப்பட்ட கடிதங்களுக்கு இடையே ஒளித்து வைத்துள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது எப்.பி.ஐ குற்றம் சாட்டியுள்ளது.

 

அதிபர் பதவியை இழந்து அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறும் போது அமெரிக்க அரசின் முக்கிய ஆவணங்களை ட்ரம்ப் எடுத்துச் சென்றதாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. அதில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள  எப்.பி.ஐ " டிரம்பின் புளோரிடா மாளிகையில் நடத்திய ஆய்வில்  மொத்தமிருந்த15 பெட்டிகளில் 14 பெட்டிகள் கைப்பற்றப்பட்டது. அதில் அமெரிக்க அரசின் வெளியிடக்கூடாத ரகசிய ஆவணங்களை  பத்திரிகைகள், கடிதங்கள் மற்றும் நாளேடுகளுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்தது" என தெரிவித்துள்ளது.  

 

14 பெட்டிகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் 184 ஆவணங்கள் வகைப்படுத்தப்பட்டது என்றும் 25 ஆவணங்கள் மிக ரகசியத் தன்மை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


 

 

 

Next Story

ரகசிய ஆவணங்களை கையோடு தூக்கிச் சென்ற ட்ரம்ப்- எஃப்.பி.ஐ அதிரடி!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

Trump who carried the secret documents with his hand - FBI action!

 

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப் பங்களாவில் எஃப்.பி.ஐ ரெய்டு நடத்தியதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் இந்த சோதனையில் மிக முக்கிய ரகசிய ஆவணங்களை எஃப்.பி.ஐ கைப்பற்றி சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

கடந்த 9ஆம் தேதி தெற்கு ப்ளோரிடாவில் உள்ள தனது கடற்கரை பங்களாவில் எஃப்.பி.ஐ சோதனை நடத்தியது என ட்ரம்ப் கூறியிருந்தார். இதன்பின் வெளியான தகவல்கள் அமெரிக்க அரசியல் வட்டத்தில் அதிர்வை கிளம்பின. முன்னாள் அதிபர் ட்ரம்ப் அமெரிக்க உளவுத்துறை சட்டத்தை மீறும் வகையில் பதவி விலகிய பிறகு முக்கிய ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்காமல் கையோடு எடுத்து சென்றுவிட்டதாகப் புகார்கள் கிளம்பிய நிலையிலேயே இந்த சோதனையானது நடைபெற்றது. இந்த புகாரின் அடிப்படையில் நீதிமன்ற அனுமதியின்படி எஃப்.பி.ஐ ட்ரம்பிற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். 

 

இந்நிலையில் கடந்த வாரம் ப்ளோரிடாவில் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் விவரங்களை நீதிமன்றத்தில் எஃப்.பி.ஐ தெரிவித்தது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் அமெரிக்காவின் பாதுகாப்பு தொடர்பான மிக முக்கிய ரகசிய ஆவணங்களும் உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த சோதனை குறித்து ட்ரம்ப் அவருடைய 'ட்ரூத்' எனும் சமூகவலைத்தளத்தில் 'தன்னிடம் கேட்டிருந்தால் ஆவணங்களை ஒப்படைத்திருப்பேன்; இதற்காக வீட்டின் பூட்டை உடைத்து அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது' என்று கூறியுள்ளார்.