Advertisment

“பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், அதன் முதுகெலும்பு உடைந்து விடும்” - பிரதமர் மோடி பேச்சு

 PM Modi speech If BJP comes to power, its backbone will be broken

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவானது இன்று (20-05-24) நாடு முழுவதும் உள்ள 49 தொகுதிகளுக்கும் நடைபெற்று வருகிறது.

Advertisment

இதற்கிடையில், ஒடிசாவில் இன்று (20-05-24) பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “ஒடிசாவில் ஒரு மாஃபியா எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறது. மேலும், யாரையும் போட்டியிட அனுமதிக்கவில்லை. ஜூன் 10ஆம் தேதி பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், அதன் முதுகெலும்பு உடைந்து விடும். நமது வீடுகளின் சாவிகள் தொலைந்து போனால், ஜெகநாதரைப் பிரார்த்தனை செய்து, இறைவனின் ஆசீர்வாதத்துடன் ஓரிரு மணி நேரத்தில் அவற்றைக் கண்டுபிடித்து விடுவோம். ஆனால் பகவான் ஜகன்னாத ரத்ன பண்டரின் சாவிகள் காணாமல் போய் ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. ரத்ன பண்டரின் சாவி காணாமல் போனது தொடர்பான விசாரணை கமிஷன் அறிக்கை, சாவிகள் தமிழகத்திற்கு சென்று விட்டதால், ஆறு ஆண்டுகளாக அது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

Advertisment

விசாரணை அறிக்கை என்ன ஆனது என்பதை ஒடிசா முழுவதும் அறிய விரும்புகிறது. பி.ஜே.டியின் மௌனம் மீது சந்தேகம் வலுக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்ததும், முழு உண்மையும் வெளிவரும் என்றும், அறிக்கையை வெளியிடுவோம் என்றும் மக்களுக்கு உறுதியளிக்கிறேன். ஜெகந்நாதருக்கு நாம் செய்யும் சேவை இந்தப் பணியிலிருந்து தொடங்கும். நீங்கள் பி.ஜே.டிக்கு 25 ஆண்டுகள் கொடுத்தீர்கள். அதன் முடிவுகள் உங்களுக்குத் தெரியும்.

இந்த ஆண்டுகளில் ஒடிசா மக்கள் சாதித்தது என்ன? இன்றும் விவசாயிகள், இளைஞர்கள் சிரமத்தில் உள்ளனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைக்குச் செல்கிறார்கள். ஒடிசாவின் ஏழை மக்களைப் பார்க்கும்போது மனது வலிக்கிறது. வளமான மற்றும் செழிப்பான மாநிலமாக இருந்தாலும், இங்குள்ள மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பின்தங்கிய நிலையில் நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று நான் மிகவும் வேதனைப்படுகிறேன். அரசை அழித்து இங்குள்ள லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளை சிதைத்தது யார்? பாஜகவுக்கு வாக்களியுங்கள், ஒடிசாவின் எந்த மகனோ அல்லது மகளோ ஒடிசாவின் முதலமைச்சராவார் என்று மோடி உத்தரவாதம் அளிக்கிறேன். ஜூன் 10ஆம் தேதி ஒடிசாவில் இரட்டை எஞ்சின் அரசாங்கம் பதவியேற்கவுள்ளது. இந்த அரசு செல்ல வேண்டும். பி.ஜே.டி வழிவகுத்தது, இப்போது அவர் செல்ல வேண்டிய நேரம் இது” என்று கூறினார்.

modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe