Advertisment

சமூக வலைதளங்களில் இருந்து விலக பிரதமர் மோடி முடிவு?

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டதில் காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்ததால் பதட்டமான சூழல் நிலவியது. இதேபோல் டெல்லியில் சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் நடத்திய பேரணிக்கு பின்னர் அங்கு வெடித்த கலவரங்களால், வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகள் பதட்டமான சூழலை சந்தித்தன.

Advertisment

PM Modi-Social Media

இப்படி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் இவ்வேலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "பேஸ்புக் , ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து விலகுவது குறித்து நேற்று யோசித்ததாக" தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் மிகுந்த ஈடுபாடுடன் இருக்கும் மோடி இவ்வாறு பதிவிட்டிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

social media pm modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe