Skip to main content

‘பதவி கேட்பதற்கு செத்துபோயிடலாம்’;ஓரங்கட்டிய பிரதமர் - அதிர்ச்சியில் முக்கிய புள்ளி

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
PM Modi sidelined Shivraj Singh Chouhan in Madhya Pradesh politics

மத்திய பிரதேச மாநிலத்தில் சட்ட மன்ற தேர்தல் கடந்த நவம்பர் 17ஆம் தேதி நடைப்பெற்றது. அங்கு, 230 சட்ட போரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குபதிவு நடந்து முடிந்தது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கையானது டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, முதல்வர் வேட்பாளராக யாரையும் முன் நிறுத்தாமல், கர்நாடக சட்டமன்ற தேர்தல் பாணியில் பிரதமர் மோடியை முன் வைத்து தேர்தலில் களம் இறங்கியது. தேர்தல் முடிவில், 230 தொகுதிகளில் 163 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வென்று இந்த முறையும் ஆட்சியை தக்க வைத்தது. அதனை தொடர்ந்து யார் அடுத்த முதல்வர்? என கட்சிக்குள்ளேயே இழுபறி நிலவியது.

அடுத்து மீண்டும் முதலமைச்சராக சிவ்ராஜ் சிங் சவுகானே தொடர்வார் என அவரின் ஆதரவாளர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். அந்த போட்டியில், நரேந்திர தோமர், பிரஹலாத் படேல் போன்ற மூத்த தலைவர்களின் பெயரும் இருந்தாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, அடுத்த முதல்வர் இவர் தான், என பல பெயர்களை முன்னணி ஊடகங்கள் வெளியிட்டன. இந்நிலையில், டிசம்பர் 12ம் தேதி பாஜக கட்சியின் எம்.எல்.ஏ கூட்டம் நடப்பெற்றது. யாரும் எதிர்பாராத திருப்பு முனையாக, பரிந்துரையிலேயே இல்லாத நபராக உஜ்ஜைன் தொகுதி எம்.எல்.ஏ மோகன் யாதவ், அடுத்த மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்ந்து, மாநிலத்தில் இந்த முறை இரண்டு துணை முதல்வர்கள் என,  ஜெகதீஷ் தியோரா மற்றும்  ராஜேந்திர சுக்லா இருப்பார்கள் என அறிவிப்பு வெளியானது. மேலும், சட்டப்பேரவை சபாநாயகராக கட்சியின் மூத்த உறுப்பினர் நரேந்திர சிங் தோமர் இருப்பர் என முடிவு செய்யப்பட்டது. இந்த அறிவிப்புகளை சிவ்ராஜ் சிங் சவுகான் எல்லோர் முன்னிலையிலும் அறிவித்தார். கூட்டத்தில், தேர்வு செய்யப்பட்ட புதிய முதல்வர் மோகன் யாதவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஆனால், கூட்டம் முடிந்த பிறகு சிவராஜ் சிங், ஊடகங்கள் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல நழுவி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து, வேறு வழியின்றி சிவராஜ் சிங் சவுகான் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்தார். அதனை தொடர்ந்து, புதியதாக பொறுப்பேற்றுள்ள மோகன் யாதவ் மாநில ஆளுநர் மங்குபாய் படேலை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். 

இந்த முடிவு மத்திய பிரதேச பிஜேபி கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. புதியதாக தேர்வு செய்யப்பட்ட மோகன் யாதவ் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் வளர்ந்து வந்தவர். இதனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கிடைத்துள்ளது. இவர், 2018ம் ஆண்டு இரண்டாவது முதல்முறையாக எம்எல்ஏ ஆனார். அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே, மாநிலத்தின் உயர் கல்வி அமைச்சராக பதவியேற்றார். அதன், பிறகு ஆர்.எஸ்.எஸ் செல்வாக்குடன், மாநிலத்தின் முதவர் பதவிக்கு வந்து விட்டார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிகின்றனர். 

ஆனால், நீண்ட காலம் பாஜகவில் முதல்வர் பதவியை வகித்த பெருமையை கொண்ட சிவராஜ் சிங் சவுகான், தனி பெரும் ஆளுமையாக வளர்ந்து வருகிறார் என்பதற்காக வேண்டுமென்றே பிஜேபியின் தலைமை பதவியை பறித்துள்ளது. இதனை சொந்த கட்சியே செய்யலாமா? என போர்க்கொடி தூக்குகின்றனர் சிவராஜ் சிங் சவுகான் ஆதரவாளர்கள். மேலும், சமூக வலைத்தளங்களிலும், "மேற்கை ஏற்காதே.. வீழும் சூரியனே.. தார்மம் தோற்காதே.. ஆளும் காவலனே.. "என சிவராஜ் சிங் சவுகானுக்கு அதரவாக பல பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், டிசம்பர் 12ம் தேதி, முதல்வர் பதவியில் இருந்து விலகிய சிவராஜ் சிங் சவுகானை, அவரது வீட்டில் சந்தித்த பெண் தொண்டர்கள், திடீரென்று அவரை கட்டிப்பிடித்து கதறி அழுதனர். தொண்டர்களின் தலையில் கைவைத்து ஆசுவாசப்படுத்திய முன்னாள் முதல்வர், "எனக்காக பதவி கேட்பதை விட செத்துப்போவது மேல். கட்சி எனக்கு எந்த பணியை கொடுத்தாலும் நான் செய்ய காத்திருக்கிறேன். இதனை, தாழ்மையுடன் சொல்ல விரும்புகிறேன். ஒருவர் சுயநலமாக இருக்கும்போது, ​​அவர் தன்னைப் பற்றியே சிந்திக்கிறார். ஆனால் பாஜவில் ஒவ்வொரு ஊழியருக்கும் சில வேலை இருக்கிறது. எனக்கு ஒதுக்கப்பட்ட எந்த வேலையையும் நான் செய்வேன். எனக்கு எந்த அநீதியும் இழைக்கவில்லை. சாதாரண தொண்டனான நான், 16 ஆண்டுகளாக முதல்வராக இருந்துள்ளேன். இதை விட வேறு என்ன வேண்டும்" என கூறிக்கொண்டே அங்கிருந்த பெண் தொண்டர்களை ஆசுவாசப்படுத்தினார்.

மேலும் பேசிய அவர், ''செடி நடுதல் என்பது எனக்கு பிடித்தமான விஷயம். புதிய முதல்வர் டாக்டர் மோகன் யாதவிடம் நான் கேட்பது ஒன்றுதான், நான் செடி நடுவதற்கு அரசு நிலத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும்" என கோரிக்கை வைத்தார். மத்திய பிரதேச அரசியலில் சிவராஜ் சிங் சவுகான் ஒதுக்கப்பட்டதற்கு காரணம், "அவரின் மீது காங்கிரஸ் கட்சியினர் 'போன் பே 50% கமிஷன்' என்று  மத்திய பிரதேசம் முழுவதும் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் ஒட்டியது. சிறுபான்மையினருக்கு எதிரான புல்டோசர் கலாச்சாரம் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மீதான அடக்குமுறை குற்றச்சாட்டுகள் குவிந்தது போன்றவை, அவருக்கு எதிர்வினையாக மாறிவிட்டது. பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை வைத்து, எதிர்க்கட்சிகள் ஓபிசி பிரதிநிதித்துவ பிரச்சனையை எழுப்பின. புதியதாக தேர்வு செய்த முதல்வரும் ஓபிசி பிரிவினர் என்பதால், இந்த நியமனத்தை பகடைக்காயாக வைத்து பீகார் மற்றும் உத்தரபிரதேசத்திலும் பா.ஜ.க கட்சி காய் நகர்த்தியுள்ளது" என அரசியல் ஆலோசகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், முதல்வராக தேர்வாகிய பின் பேசிய மோகன் யாதவ், "என்னைப் போன்ற சிறிய தலைவருக்கு, பொறுப்பு வழங்கிய மத்திய, மாநில தலைமைக்கு நன்றி. இதுதான் பாரதிய ஜனதா கட்சி. இந்த பொறுப்பிற்கு நான் தகுதியானவன் இல்லை. என்றாலும் உங்கள் அன்பும், ஆசியும், ஆதரவும் கிடைத்தால், கண்டிப்பாக சாதிக்க, முடிந்த வரை முயற்சி செய்வேன். மீண்டும் நன்றி" என உற்சாகமாக பேசினார்.

பிஜேபியின் புதிய அரசியல் யுக்தி, மத்திய பிரதேச பாஜக அரசியலில் பெரும் பரபரப்பையும் அதிருப்தியும் ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

நேற்று சூரத், இன்று இந்தூர்; தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க-வின் சூழ்ச்சி?

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
BJP's election maneuver? on Surat and Indore

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 19ஆம் தேதி எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில், காங்கிரஸ், பா.ஜ.க, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  அதன்படி, குஜ்ராத் மாநிலத்துக்கு உட்பட்ட சூரத் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில், பா.ஜ.க சார்பில் முகேஷ் தலால் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே போல், காங்கிரஸ் கட்சி சார்பாக நிலேஷ் கும்பானி, பகுஜன் சமாஜ் கட்சி பியோரேலால் பாரதி உட்பட 8 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில்,காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனுவில் போலியான சாட்சி கையெழுத்திட்டதாக கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக சுரேஷ் பத்ஷாலா அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது வேட்புமனுவும் தகுதியற்றது எனக் கூறி, அவருடைய வேட்புமனுவிலும் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி நிராகரிக்கப்பட்டது.

BJP's election maneuver? on Surat and Indore

இதனால், சூரத் மக்களவைத் தொகுதிக்கான போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் கடந்த 24ஆம் தேதி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உட்பட அனைத்து சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டனர். இதனை தொடர்ந்து, சூரத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால், வாக்குப்பதிவுக்கு முன்னரே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.  இது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளையும் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டிய கடைசி நாளின் போது, காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டு பா.ஜ.கவில் இணைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மொத்தம் 29 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில், ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7 மற்றும் மே 13 என நான்கு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. மத்திய பிரதேசத்தில் நான்கு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகள் தீவிரமடைந்து வருகிறது. 

BJP's election maneuver? on Surat and Indore

அதன்படி, மத்தியப் பிரதேசத்தில், கடந்த 19ஆம் தேதி 6 தொகுதிகளுக்கும், கடந்த 26ஆம் தேதி மீதமுள்ள 6 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவி நடைபெற்றது. நான்காம் கட்டமாக நடைபெறும் தேர்தலில் இந்தூர் உள்ளிட்ட 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அக்‌ஷய் கண்டி பாம் என்பவர் அறிவிக்கப்பட்டார். அதே போல், பா.ஜ.க சார்பில் தற்போதைய சிட்டிங் எம்.பியான சங்கர் லால்வாணி மீண்டும் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 25ஆம் தேதியுன் நிறைவடைந்து, கடந்த 26ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. வேட்பாளர்கள் வேட்புமனுவை வாபஸ் பெற நேற்று (29-04-24) கடைசி நாள் ஆகும். 

இந்த சூழ்நிலையில், இந்தூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்‌ஷய் கண்டி பாம் நேற்று (29-04-24) தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், அக்‌ஷய் கண்டி பாம் வாபஸ் பெற்ற அடுத்த சில மணி நேரத்திலேயே பா.ஜ.க அலுவலகத்துக்கு சென்று பா.ஜ.கவில் இணைந்துள்ளார். ஏற்கனவே, சூரத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது காங்கிரஸ் வேட்பாளர் கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாபஸ் செய்து பா.ஜ.க.வில் இணைந்தது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும், இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.