PM Modi shares Outdated thinking needs to be reconsidered

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாகத் தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (04-06-24) எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாளை வெளிவர இருக்கும் தேர்வு முடிவுக்காக பொதுமக்கள் ஆரவமுடன் நாளை விடியலுக்காக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Advertisment

இதற்கிடையில், ஆன்மீக பயணத்துக்காக கடந்த மே 30ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வந்த பிரதமர் மோடி, விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாள் தங்கி இருந்து தியானம் செய்தார். 48 மணி நேரம் தியானம் செய்த பிரதமர் மோடி கடந்த 1ஆம் தேதி நிறைவு செய்தார். விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் செய்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

Advertisment

இந்த நிலையில், கன்னியாகுமரியின் தியானத்தில் இருந்த போது மனதில் தோன்றிய சிந்தனைகளை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “என் மனம் பல அனுபவங்களாலும் உணர்ச்சிகளாலும் நிரம்பியுள்ளது. என்னுள் எல்லையற்ற ஆற்றல் ஓட்டத்தை உணர்கிறேன். இந்தத் தேர்தல்களின் இறுதிப் பேரணி என்னைப் பஞ்சாபில் உள்ள ஹோஷியார்பூருக்கு அழைத்துச் சென்றது. அதன் பிறகு, கன்னியாகுமரிக்கு, வந்தேன். தேர்தல் வெறி என் உள்ளத்திலும் மனதிலும் எதிரொலிப்பது இயல்பு. பேரணிகளிலும் ரோட் ஷோக்களிலும் பார்த்த பல முகங்கள் என் கண் முன்னே வந்தன.

நான் ஒரு தியான நிலைக்கு நுழைந்தேன். என் கண்கள் ஈரமாகிக்கொண்டிருந்தன. பின்னர், சூடான அரசியல் விவாதங்கள், தாக்குதல்கள் மற்றும் எதிர் தாக்குதல்கள், குற்றச்சாட்டுகளின் குரல்கள் மற்றும் வார்த்தைகள் அவை அனைத்தும் வெற்றிடமாக மறைந்துவிட்டன. என்னுள் ஒரு பற்றின்மை உணர்வு வளர ஆரம்பித்தது. என் மனம் வெளி உலகத்திலிருந்து முற்றிலும் விலகியது.

Advertisment

இவ்வளவு பெரிய பொறுப்புகளுக்கு மத்தியில் தியானம் சவாலானதாக மாறுகிறது. ஆனால் கன்னியாகுமரி நிலமும் சுவாமி விவேகானந்தரின் உத்வேகமும் அதை சிரமமின்றி ஆக்கியது. பாரதத்திற்குச் சேவை செய்யவும், நமது நாட்டின் சிறப்பை நோக்கிய பயணத்தில் நமது பங்கை நிறைவேற்றவும் கடவுள் நம்மைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஒரு தேசமாக, காலாவதியான சிந்தனை மற்றும் நம்பிக்கைகளை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். கன்னியாகுமரியில் உள்ள இந்த இடத்தில் சுவாமி விவேகானந்தர் தியானத்தில் இருந்தபோது என்ன அனுபவித்திருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எனது தியானத்தின் ஒரு பகுதி இதேபோன்ற எண்ண ஓட்டத்தில் கழிந்தது” எனத் தெரிவித்தார்.