Advertisment

“காங்கிரஸ் செய்த நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்” - பிரதமர் மோடி

 PM Modi said I want to learn the good things Congress has done

Advertisment

மக்களவைத் தேர்தல் ஒவ்வொரு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டங்களாக 430 தொகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்று (25-05-24) 7 மணியளவில் ஆறாம் கட்டமாக 58 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

அதன்படி, பீகார் மாநிலத்தில் 8 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 10 தொகுதிகளுக்கும், ஒடிசா மாநிலத்தில் 6 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும், டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் உள்ள 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. அந்த வகையில், இன்று காலை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

இதனிடையே, பல்வேறு ஊடகங்களுக்கு பிரதமர் மோடி பேட்டிகளை அளித்து வருகிறார். அந்த வகையில், பிரதமர் மோடி இன்று (25-05-24) தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் பேசியதாவது, “என் மீதுமோசமான துஷ்பிரயோகங்களைப் பயன்படுத்துபவர்களை நீங்கள் காண்பீர்கள். மேலும், நல்ல விஷயங்களை வெளிப்படுத்துபவர்களையும் நீங்கள் காண்பீர்கள். நம்பிக்கையை வெளிப்படுத்துபவர்கள் புண்படுத்தப்படவோ அல்லது ஏமாற்றமடையவோ கூடாது என்பதை உறுதிப்படுத்துவது எனது கடமை. சிலர் என்னைப் பைத்தியக்காரன் என்று அழைக்கலாம். ஆனால் பர்மாத்மா (கடவுள்) என்னை ஒரு நோக்கத்திற்காக அனுப்பினார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நோக்கம் நிறைவேறினால், என் வேலை ஒன்றாக இருக்கும். அதனால்தான் நான் கடவுளுக்கு என்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருக்கிறேன்.

Advertisment

நான் ஒருபோதும் சவால் விடவில்லை, நான் அவர்களை அழைத்துச் செல்ல விரும்புகிறேன். நான் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்கள் 60-70 ஆண்டுகளாக ஆட்சி அமைத்துள்ளனர். அவர்கள் செய்த நல்ல விஷயங்களை நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். பழைய மனநிலையிலிருந்து விடுபட வேண்டும். 21ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப 18ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட மரபுகளையும் சட்டங்களையும் என்னால் பயன்படுத்த முடியாது. சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றத்தின் மூலம் மாற்றத்தை நான் உருவாக்க விரும்புகிறேன்” எனக் கூறினார்.

congress modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe