Skip to main content

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் மோடி பாராட்டு

Published on 08/08/2022 | Edited on 08/08/2022

 

PM Modi praises Vice President Venkaiah Naidu

 

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கான வழியனுப்புதல் விழா இன்று நடைபெற்றது.

 

இந்திய குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நாளை மறுநாளுடன் நிறைவடையவுள்ள நிலையில், அவருக்கான வழியனுப்புதல் விழா மாநிலங்களவையில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் மோடி, குடியரசு துணைத்தலைவராக வெங்கையா நாயுடு சிறப்பாகச் செயல்பட்டதாக பாராட்டு தெரிவித்தார். இளைஞர்களுடன் வெங்கையா நாயுடுவுக்கு நல்ல புரிதல் இருப்பதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, கடும் உழைப்பு மற்றும் விடாமுயற்சி மூலம் தன்னுடைய பொறுப்புகளைச் சிறப்பாக கையாண்டதாகவும் பாராட்டினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"இயற்கைப் பாதுகாக்கப்பட வேண்டும்; ஆக்கிரமிப்புகள் தடுக்கப்பட வேண்டும்"- குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு! 

Published on 31/07/2022 | Edited on 31/07/2022

 

"Nature must be protected; encroachments must be prevented"- Vice President Venkaiah Naidu speech!

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இன்று (31/07/2022) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற குடியரசுத் தலைவர் கொடி வழங்கும் விழாவில், தமிழக காவல்துறைக்கு குடியரசுத் தலைவர் கொடியை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். இதுவரை 10 மாநில காவல்துறைகள் மட்டுமே இந்த கவுரவ கொடியைப் பெற்றுள்ளன. 

 

குடியரசுத் தலைவர் கொடி அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகளுக்கு பின் கொடி முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது. உத்தரப்பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா, ஜம்மு- காஷ்மீர் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகம் பெற்றுக் கொண்டது. தமிழகத்தில் காவலர் முதல் டி.ஜி.பி. வரையிலான காவல்துறையினர் கொடியை இனி தங்கள் சீருடையில் அணியவுள்ளனர். 

 

அனைத்து காவலர்களுக்கும் பொருத்தும் வகையிலான புதிய இலச்சினையை முதலமைச்சரிடம் குடியரசுத் துணைத் தலைவர் வழங்கினார். அதைத் தொடர்ந்து, குடியரசுத் துணைத் தலைவருக்கு நினைவுப் பரிசாக சதுரங்க அட்டையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

"Nature must be protected; encroachments must be prevented"- Vice President Venkaiah Naidu speech!

விழாவில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, "தமிழக காவல்துறை இந்தியாவிலேயே சிறந்த காவல்துறையாக விளங்குகிறது. அதிகளவில் நடைபெறும் சைபர் குற்றங்களை காவல்துறையினர், அறிவியல் பூர்வமாகத் தடுக்க வேண்டும். சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு என்று தனியாக ஒன்று செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது. 

 

கடத்தப்பட்ட கடவுள் சிலைகளை மீட்பதில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பாகச் செயல்படுகிறது. இயற்கை பாதுகாக்கப்பட வேண்டும்; ஆக்கிரமிப்புகள் தடுக்கப்பட வேண்டும்" எனக் கூறியுள்ளார். 

 

விழாவையொட்டி, ராஜரத்தினம் மைதானத்தைச் சுற்றி 200- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

 

Next Story

வெங்கையா நாயுடுவுக்கு கரோனா தொற்று....

Published on 23/01/2022 | Edited on 23/01/2022

 

jkl

 

இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை குறையாமல் இருந்து வருகிறது. 

 

குறிப்பாக, முதல்வர்கள், கவர்னர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டவர்களுக்கும் தற்போது அடிக்கடி கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது துணைக் குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான பாதிப்பு இருப்பதால் வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு கடந்த ஆண்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.