Skip to main content

வெளிநாட்டு அழிக்கும் கருத்தியலிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்- நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி!

Published on 08/02/2021 | Edited on 08/02/2021
pm modi

 

 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த ஜனவரி 29-ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 1- ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2021- 2022- ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்ற விவாத நேரத்தில், உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறைசார்ந்த மத்திய அமைச்சர்கள் பதிலளித்து வந்தனர். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, எதிர்க்கட்சியினர் செய்த அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டும் வந்தது. 

 

இந்தநிலையில் இன்று குடியரசு தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் உரையாற்றினார். அப்போது அவர், வெளிநாட்டின் அழிக்கும் கருத்தியலிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

 

பிரதமர் மோடி ஆற்றிய உரை:

 

இந்தியா உண்மையிலேயே வாய்ப்புகளின் நிலம். பல வாய்ப்புகள் நமக்குக் காத்திருக்கின்றன. எனவே, இந்த வாய்ப்புகளை ஒருபோதும் எளிதாக கடந்துச் செல்ல விடக்கூடாது என்ற ஒரு தீர்மானத்துடன், இளமையாகவும், உற்சாகமாகவுமுள்ள தேசம் கனவுகளை நனவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.உலகின் கண்கள் இந்தியா மீது உள்ளன. இந்தியாவில் மீது எதிர்பார்ப்புகள் உள்ளன, மேலும் நமது கிரகத்தின் முன்னேற்றத்திற்கு இந்தியா பங்களிக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. நீங்கள் சமூக வலைதளங்களில் பார்த்திருக்கலாம். ஒரு வயதான பெண்மணி தனது குடிசைக்கு வெளியே நடைபாதையில் உட்கார்ந்து, ஒரு மண் விளக்கைக் ஏற்றிக்கொண்டு, இந்தியாவின் நலனுக்காக பிரார்த்தனை செய்கிறார். நாம் அவரை கேலி செய்கிறோம். ஒருபோதும் பள்ளிக்குச் செல்லாத ஒருவர் விளக்குகளை ஏற்றி இந்தியாவுக்கு சேவை செய்ய முடியும் என்று நினைத்தால், அவர்கள் அதைச் செய்யலாம். இது கேலி செய்யப்படுகிறது.

 

போலியோ, பெரியம்மை போன்ற பெரிய அச்சுறுத்தல் இருந்த நாட்களை இந்தியா கண்டுள்ளது. இந்தியாவுக்கு தடுப்பூசி கிடைக்குமா அல்லது எத்தனை பேருக்கு கிடைக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அந்த நாட்களில் இருந்து, நம் நாடு உலகிற்கே தடுப்பூசிகளை தயாரிக்கும் நிலையில் இருக்கிறோம். இது நமது தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. இந்தியாவின் தேசியவாதம் மீதான தாக்குதல்கள் குறித்து குடிமக்களை எச்சரிப்பது இன்று அவசியம். நேதாஜியின் கொள்கைகளை நாங்கள் மறந்துவிட்டோம். நான் சில நேரங்களில் ஆச்சரியப்படுகிறேன், உலகம் நமக்கு ஒரு ஒன்றை சொல்கிறது. அதைப் பின்பற்றத் தொடங்குகிறோம். 'உலகின் மிகப்பெரிய ஜனநாயகம்' இதைக் கேட்பது மகிழ்ச்சியாக இருக்கிறது, ஆனால் இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்று நமது இளைஞர்களுக்கு நாம் கற்பிக்கவில்லை.

 

ஷரத் பவார் மற்றும் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் அனைவரும், அனைத்து அரசாங்கங்களும் விவசாய சீர்திருத்தங்களுக்காக நின்றன. அவர்களால் அதைச் செய்ய முடிந்ததோ இல்லையோ, ஆனால் எல்லோரும் அதைச் செய்ய வேண்டும் என்று வாதிட்டனர். குறைந்தபட்ச ஆதார விலை இருக்கிறது. அது தொடரும். தேசம் முன்னேறி வருகிறது. நாங்கள் அந்நிய நேரடி முதலீட்டைப் பற்றி பேசுகிறோம், ஆனால் ஒரு புதிய அன்னிய நேரடி முதலீடு முன்னணியில் வந்துள்ளதை நான் காண்கிறேன். இந்த புதிய அன்னிய நேரடி முதலீட்டிலிருந்து நாட்டை நாம் பாதுகாக்க வேண்டும். எங்களுக்கு அந்நிய நேரடி முதலீடு தேவை, ஆனால் புதிய அன்னிய நேரடி முதலீடு 'வெளிநாட்டு அழிக்கும் கருத்தியல்'. அதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந்த நாடு ஒவ்வொரு சீக்கியராலும் பெருமை கொள்கிறது. அவர்கள் இந்த நாட்டிற்காக என்ன செய்யவில்லை? நாம் அவர்களுக்கு எந்த மரியாதை கொடுத்தாலும் எப்போதும் குறைவாகவே இருக்கும். அவர்கள் குறித்து சிலர் பயன்படுத்தும் மொழி மற்றும் அவர்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பது ஒருபோதும் தேசத்திற்கு பயனளிக்காது.

 

 நாட்டில் ஒரு புதிய நிறுவனம் வந்துள்ளது. அது 'அந்தோலன் ஜீவி' (இயக்கத்தால் வாழ்பவர்கள்). போராட்டம் நடக்கும் இடத்திலெல்லாம் அவர்களைக் காணலாம், அது வக்கீல்கள், மாணவர்கள் அல்லது தொழிலாளர்களின் கிளர்ச்சியாக இருந்தாலும், அவர்கள் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கலாம். அவர்களால்'ஆண்டோலன்' (இயக்கம்) இல்லாமல் வாழ முடியாது, நாம் அவர்களை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து தேசத்தைப் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.