Skip to main content

புதிய நாடாளுமன்றத்தில் இந்தியாவின் குறிக்கோள்கள் நிறைவேறும் - அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர்..

Published on 10/12/2020 | Edited on 10/12/2020

 

pm modi

 

இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்துக்கு டெல்லியில் அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.  இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை, ரூபாய் 971 கோடி செலவில் 'டாடா' நிறுவனம் கட்ட உள்ளது. தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு அருகில், 'சென்ட்ரல் விஸ்தா' திட்டத்தில் இப்புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. 

 

சுயசார்பு திட்டத்தின் கீழ் 64,500 சதுர மீட்டரில் அமைய உள்ள, இந்தப் புதிய கட்டிடம் 75- வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு முன்பாக, கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஒரே நேரத்தில் 1,200- க்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் புதிய நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. மக்களவையில் 888 இருக்கை வசதிகளும், மாநிலங்களவையில் 384 இருக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது. நிலநடுக்கத்தைத் தாங்கக்கூடிய வலிமையுடன் புதிய கட்டிடம் எழுப்பப்படவுள்ளது. தரைதளம், தரைக்குக் கீழே ஒரு தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என மொத்தம் 4 தளங்களுடன் புதிய கட்டிடம் கட்டப்படவுள்ளது. 

 

காகிதப் பயன்பாட்டுக்கு அவசியமில்லாத வகையில், புதிய கட்டிடத்தில் தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. நூலகம், எம்.பி.களுக்கான ஓய்வறைகள், நிலைக்குழு அலுவலகங்கள் உள்ளிட்டவை புதிய கட்டிடத்தில் அமைக்கப்பட உள்ளன. குடியரசுத் தலைவர், பிரதமருக்கான சிறப்பு நுழைவு வாயில்களுடன் சேர்த்து ஆறு நுழைவு வாயில்களைக் கொண்ட நாடாளுமன்றக் கட்டிடம், முக்கோண வடிவில் கட்டப்பட உள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட 120 பிரதான அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு எம்.பி.க்கும் 40 சதுர மீட்டர் அளவில் அலுவலக அறை ஒதுக்கப்பட உள்ளது. டாடா நிறுவனம் கட்டும் இந்தக் கட்டிடம் செயல்பாட்டுக்கு வந்த பின், தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடம் தொல்பொருள் சொத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, பழைய நாடாளுமன்றக் கட்டிடம் இந்திய மக்களின் தேவைகளை நிறைவேற்றியதாகவும், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில், 21 -ஆம் நூற்றாண்டின், இந்தியாவின் லட்சியங்கள் நிறைவேறும் எனவும் கூறினார்.

 

pm modi

 

பிரதமர் மோடி, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பேசியதாவது, "இந்தநாள், இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் ஒரு மைல்கல். இந்திய மக்களாகிய நாம் அனைவரும் இணைந்து, இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை எழுப்புவோம். இப்போதிருக்கும், நாடாளுமன்றக் கட்டிடம், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவிற்குப் புதிய திசையைக் கொடுத்தது. இப்புதிய நாடாளுமன்றக் கட்டிடம், சுயசார்பு இந்தியா உருவாக்கப்படுவதற்கான ஆதாரமாகத் திகழும். பழைய நாடாளுமன்றக் கட்டிடம், இந்திய மக்களின் தேவைகளை நிறைவேற்றியது, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் 21 நூற்றாண்டின் இந்தியாவின் லட்சியங்கள் நிறைவேறும். 

 

இந்தியாவில், ஜனநாயகம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை நாம் பார்க்கிறோம். இந்தியாவில், ஜனநாயகம் என்பது ஒரு கலாச்சாரம், ஒரு வாழ்க்கை முறை. இந்தியா என்ற நாட்டின் உயிராக, ஜனநாயகம் இருக்கிறது. வேறுபட்ட பார்வைகளும், வேறுபட்ட கோணங்களும் இந்தியாவின் ஜனநாயகத்தை துடிப்பானதாக வைத்திருக்கிறது. இங்கு வேறுபாடுகளுக்கு இடமிருக்கிறது. ஆனால், ஒரு போதும் பிரிவு இருக்கக்கூடாது. நமது ஜனநாயகம், அதன் லட்சியத்தோடு முன்னேறும்" இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Priyanka Gandhi hits back at Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

 Priyanka Gandhi hits back at Prime Minister Modi

இந்நிலையில் தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்களிடமிருந்து உங்கள் தாலியையும் தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக சிலர் கூறுகின்றனர். மங்கள சூத்திரத்தின் முக்கியத்துவத்தை மோடி புரிந்துகொண்டிருந்தால் இதுபோன்ற விஷயங்களை அவர் கூறியிருக்கமாட்டார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது உங்கள் தங்கமான மங்களசூத்திரத்தை யாராவது பறித்துச் சென்றார்களா?.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எனது சகோதரிகள் தங்களுடைய மங்களசூத்திரங்களை அடமானம் வைக்க நேரிட்டபோது பிரதமர் எங்கே இருந்தார்?. விவசாயிகள் போராட்டத்தின் போது சுமார் 600 விவசாயிகள் வீரமரணம் அடைந்தபோது, அவர்களின் விதவைகளின் மங்களசூத்திரங்களைப் பற்றி அவர் நினைத்தாரா?. நாடு போரில் ஈடுபட்ட போது, எனது பாட்டி இந்திரா காந்தி தனது மங்களசூத்திரம் மற்றும் நகைகளை நன்கொடையாக வழங்கினார். மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் இழுத்துச் செல்லபட்ட போது, அவர்களின் தாலி குறித்துதான் கவலைப்பட்டாரா?. என் அம்மா தனது தாலியை தேசத்திற்காகத் தியாகம் செய்தார். இது போன்று இந்த நாட்டிற்காக லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் மங்களசூத்திரத்தை தியாகம் செய்தனர்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

அதே சமயம் கடந்த 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய - சீனப் போரின்போது இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கிய புகைப்படம் என ஒன்றை சமூக வலைத்தளத்தில் காங்கிரஸ் தரப்பினர் பகிர்ந்து வருகின்றனர். அதில், “மக்களின் சொத்துகளை காங்கிரஸ் கைக்கொள்ளும் என்று மோடி விமர்சிக்கிறார். ஆனால் நிஜத்தில் காங்கிரஸ் தலைவர்கள் நாட்டுக்காக தங்கள் சொத்துகளை வழங்கியவர்கள்” என குறிப்பிட்டுள்ளனர்.