ADVERTISEMENT

கரோனா பரவல் எதிரொலி: தொடர் ஆலோசனையில் ஈடுபடவுள்ள பிரதமர் மோடி!

02:51 PM Apr 19, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து 73 ஆயிரத்து 810 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சில மாநில மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் சில மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்தநிலையில் இன்று (19.04.2021) காலை பிரதமர், கரோனா பரவல் குறித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, இன்று மாலை 4.30 மணியளவில் இந்தியாவில் உள்ள சிறந்த மருத்துவர்களோடு பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும், மாலை 6.30 மணியளவில் இந்தியாவில் உள்ள முன்னணி மருந்து நிறுவனங்களோடு பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT