மத்திய அரசின்புதிய வேளாண்சட்டங்களுக்கு எதிராகவிவசாயிகள் போராட்டம் 33 வதுநாளாகதொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய அரசுடன்நாளை பேச்சுவார்த்தை நடத்ததயார் எனவிவசாயஅமைப்புகள் அறிவித்துள்ளன.
இந்தநிலையில், 100வது உழவர்ரயில் (கிசான்ரயில்)சேவையைஇன்று மாலை 4.30 மணிக்குகாணொலிகாட்சிமூலமாக தொடங்கி வைக்கவுள்ளார் பிரதமர் மோடி. மகாராஷ்டிராவில் சங்கோலா மற்றும் மேற்கு வங்கத்தின் ஷாலிமார் இடையே இந்த நூறாவதுஉழவர்ரயில் இயங்கவுள்ளது
விவசாய விளைபொருட்களை ஏற்றி செல்லும்இந்த உழவர்ரயில் சேவை, முதன்முதலில்மகாராஷ்டிராவின் தேவலாலி மற்றும் பீகார்மாநிலத்தின்தனபூர்இடையே ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங்தோமர், இதனைதொடங்கி வைத்தார். அதன்பிறகு படிப்படியாக இந்த சேவைவிரிவுபடுத்தப்பட்டு இன்று நூறாவதுஉழவர்ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.