ADVERTISEMENT

மீண்டும் ஆலோசனையில் பிரதமர் மோடி!

09:42 AM Apr 20, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில், பிரதமர் மோடி நேற்று (19.04.2021) தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். நேற்று காலை கரோனா நிலவரம் குறித்து அமைச்சர்களோடும், அதிகாரிகளோடும் ஆலோசனை நடத்திய அவர், மாலையில் இந்தியாவின் சிறந்த மருத்துவர்களோடு ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்தநிலையில், இன்று கரோனா நிலவரம் குறித்து விவாதிக்க மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்பிறகு பிரதமர் மோடி, மாலை 6 மணியளவில் தடுப்பூசி தயாரிப்பாளர்களோடு ஆலோசனை நடத்தவுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT