Skip to main content

அதிகரிக்கும் கரோனா; பிரதமர் மோடி ஆலோசனை!

Published on 19/04/2021 | Edited on 19/04/2021

 

Narendra Modi

 

இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து 73 ஆயிரத்து 810 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சில மாநில மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் சில மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. 

 

இந்தநிலையில், நாட்டில் கரோனா பரவல் குறித்து பிரதமர் மோடி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளோடு ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். இந்த ஆலோசனையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. பிரதமர் மோடி, கடந்த 17ஆம் தேதி பல்வேறு அமைச்சகங்களின் உயர் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்