Advertisment

கரோனா மூன்றாவது அலை - பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை!

pm modi

இந்தியாவில் கரோனாஇரண்டாவது அலையின் பாதிப்பு குறைந்துவருகிறது. இருப்பினும் ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் கரோனாமூன்றாவது அலை தொடங்கும் எனவும், செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் மூன்றாவது அலை உச்சத்தை தொடும் எனவும்நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisment

கரோனாஇரண்டாவது அலையின்போது கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்தநிலையில் இன்று (09.07.2021) பிரதமர் மோடி, நாட்டில் ஆக்சிஜன் இருப்பு குறித்தும்ஆக்சிஜன் உற்பத்தியைப் பெருக்குவது குறித்தும்ஆலோசிக்க உயர்மட்ட குழு கூட்டத்தைக் கூட்ட இருக்கிறார்.

Advertisment

இந்த ஆலோசனைக் கூட்டம், கரோனா மூன்றாவது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கருதப்படுகிறது. இன்று காலை 11.30 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

Narendra Modi oxygen
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe