Skip to main content

மோடியின் பிரச்சாரம்; உள்ளே நுழைந்த இளைஞரால் பதறிய பாதுகாப்பு அதிகாரிகள் 

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

 pm Modi campaigning Karnataka young man breached security  entered into stir

 

கர்நாடகாவில் ரோட் ஷோ பிரச்சாரத்தில் இருந்த பிரதமரிடம், 5 அடுக்கு பாதுகாப்பை மீறி இளைஞர் ஒருவர் உள்ளே நுழைந்த சம்பவம் பாஜகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கர்நாடக மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக அரசு தங்களுடைய ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதே சமயம், எதிர்க்கட்சியாக இருக்கும் தேசிய காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏற பல யூகங்களை வகுத்து வருகிறது. இதனால் கர்நாடக அரசியலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

 

மேலும், அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி கர்நாடகாவிற்குச் சென்றுள்ளார். அப்போது, ஹப்பாள்ளி பகுதிக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் ROAD SHOW நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட மோடி, காரில் நின்றபடி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சாலை மார்க்கமாக சென்றுகொண்டிருந்தார். அதே சமயம் பிரதமர் மோடியை வரவேற்பதற்காக ஏராளமான பாஜக தொண்டர்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றுகொண்டிருந்தனர். பிரதமரும், அங்கு கூடியிருந்த பொதுமக்களைப் பார்த்து கைகளை அசைத்துக்கொண்டே சென்றார்.

 

இந்நிலையில், பிரதமரைச் சுற்றி எப்போதும் எஸ்பிஜி எனப்படும் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் இருப்பார்கள். பிரதமர் மோடி எந்த இடத்திற்குச் செல்கிறாரோ அந்த இடம் முழுக்க அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த சூழ்நிலையில், எஸ்பிஜி பாதுகாப்பு வளையத்தை மீறி கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் கையில் மாலையுடன் திடீரென பிரதமர் மோடிக்கு அருகில் வந்துவிட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறப்புப் பாதுகாப்புப் படையினர், உடனே அந்த இளைஞரை தடுத்து நிறுத்தினர். இருப்பினும், அதற்குள் பிரதமர் மோடி அவரிடம் இருந்த மாலையை வாங்கிக் கொண்டார். பிரதமர் எந்த இடத்திற்குச் சென்றாலும், அவருக்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். இருப்பினும், அதையும் தாண்டி அந்த இளைஞர் பிரதமர் மோடிக்கு மிக அருகே வந்துள்ளார். இதை பிடித்துக்கொண்ட எதிர்க்கட்சிகள், பாஜக ஆளும் மாநிலத்திலேயே பிரதமருக்கு பாதுகாப்பு குறைபாடு இருந்துள்ளதாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், பாதுகாப்பு வளையத்தை மீறி பிரதமர் மோடிக்கு மாலை அணிவிக்க வந்த இளைஞரைப் பிடித்து கர்நாடக போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

- சிவாஜி 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

“மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டம் அமல்” - டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
D.K.Sivakumar said Meghadatu plan will be implemented when the Congress government is established in central

தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நீர் தொடர்பாகப் பல ஆண்டு காலமாகப் பிரச்சனை இருந்து வருகிறது. அதே வேளையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு திட்டவட்டமாகக் கூறி வருகிறது.

இதற்கிடையே, விரைவில் மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். கர்நாடகா மாநிலத்தின் சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் சித்தராமையா 2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், “தேவையான அனுமதிகளை பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும். அங்கு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இதற்கான ஒரு தனி மண்டல குழுவும், இரண்டு துணை மண்டல குழுவும் அமைக்கப்படவுள்ளன. தேவையான அனுமதிகளை கொடுத்தால் விரைவில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும். பெங்களூர் நகரில் குடிநீர் பிரச்சனையை தீர்ப்போம். மேகதாது அணை விரைவில் கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஜனதா தளம்(எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலையொட்டி, கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நேற்று (17-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “நாங்கள் எதிர்கட்சியாக இருந்த போது, மேகதாது திட்டத்திற்காக போராட்டம் நடத்தினோம். அதற்கு பணிந்து அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜ.க ரூ.1,000 கோடி ஒதுக்கியது. பெங்களூரில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மழை பெய்யாததால் ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. மேகதாது திட்டத்தை அமல்படுத்தினால்தான் பெங்களூருக்கு குடிநீர் வழங்க முடியும். அதனால், மத்தியில் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவோம். இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பயன் கிடைக்கும். இந்தத் திட்டத்திற்கு உச்சநீதிமன்றமும் ஆதரவாக கருத்து கூறியுள்ளது” என்று கூறினார்.