pm modi

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 71-வதுபிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. பிரதமரின் பிறந்தநாளையொட்டி இன்று அதிககரோனாதடுப்பூசிகளைச் செலுத்த மத்திய அரசு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. அதன்படியே இன்று மாலை 5.15 மணியளவில் சுமார் 2 கோடியே 34 ஆயிரத்து 207 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Advertisment

கரோனாதடுப்பூசி செலுத்துதலில்இதுவொரு புதிய சாதனை. ஒரேநாளில்இந்தியாவில் இரண்டு கோடி பேருக்கு கரோனாதடுப்பூசி செலுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். ஒரேநாளில்இரண்டு கோடி பேருக்குத்தடுப்பூசி செலுத்தப்பட்டசாதனையை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா,டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையின்சுகாதார பணியாளர்களுக்குஇனிப்பு வழங்கி கொண்டாடினர்.மேலும் இந்த சாதனைக்காக மன்சுக் மாண்டவியா சுகாதார பணியாளர்களுக்குநன்றியும் தெரிவித்தார்.

Advertisment