Skip to main content

17 ஆண்டுக்கால காத்திருப்புக்குப் பின்னர் கோசி பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி...

Published on 18/09/2020 | Edited on 18/09/2020

 

aa

 

பீகார் மாநிலத்தின் கனவுத்திட்டமாகப் பார்க்கப்படும் கோசி ரயில் பாலத்தைப் பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

 

பீகார் மாநிலத்தின் நிர்மலி மற்றும் பாப்தியாஹி இடையே கோசி ஆற்றின் வழியே 1887 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ரயில் பாதை கடந்த 1934 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நில நடுக்கத்தின் போது இடிந்து தரைமட்டமானது. இதன்பிறகு, இப்பகுதியில் பாலம் கட்டப்படாத நிலையில், ரயில் போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனிடையே, நீண்ட காலத்திற்குப் பிறகு இந்த ஆற்றின் குறுக்கே ரயில்வே பாலம் கட்டுவதற்கான திட்டத்தை 2003 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி கொண்டுவந்தது. 1.9 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் கட்டுமான செலவு ரூ. 516 கோடி ஆகும். இந்திய- நேபாள எல்லையில் முக்கியத்துவம் வாய்ந்த பாலமாகக் கருதப்படும் இந்தப் பாலத்தின் கட்டுமானப்பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இதன் பணிகள் அண்மையில் முடிவடைந்த சூழலில், இன்று பிரதமர் மோடி இந்தப் பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 ஹோட்டலில் பயங்கர தீ விபத்து; 6 பேர் பலியான சோகம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Incident happened 6 people for Terrible fire at hotel in patna

பீகார் மாநிலம், பாட்னா சந்திப்பு ரயில் நிலையம் அருகே தனியார் அடுக்குமாடி ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஹோட்டலில் இன்று (25-04-24) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த சிலர் சிக்கினர். இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு அங்கு ஏற்பட்டிருந்த தீயை அணைத்து, கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தப் பயங்கர தீ விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், அங்கு படுகாயமடைந்திருந்த 20க்கும் மேற்பட்டவர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்தத் தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.