Advertisment

முதல்வர்களுடன் ஆலோசனைக்குத் தயாராகும் பிரதமர் மோடி!

pm modi

Advertisment

இந்தியாவில் கரோனாவின்இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவில் கரோனா பரவல் தொடங்கியது முதல் இதுவரை இல்லாத அளவிற்கு தினசரி கரோனா எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று (04.04.2021) ஒரேநாளில்மட்டும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 588 பேருக்கு கரோனாஉறுதியாகியுள்ளது. மேலும், மஹாராஷ்ட்ராவில் நேற்று ஒரேநாளில்57 ஆயிரத்து 74 பேருக்கு கரோனாதொற்று உறுதியாகிவுள்ளது. ஒரு மாநிலத்தில் ஒரேநாளில் இத்தனை பேருக்கு கரோனாஉறுதியாவதுஇதுவே முதல்முறை. டெல்லியிலும் நேற்று ஒரேநாளில்4 ஆயிரம் பேருக்கு கரோனாதொற்று உறுதியாகியுள்ளது.

இதற்கிடையே நேற்று, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்டக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் காணொளி மூலமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமரின் முதன்மைச் செயலாளர், மத்திய அமைச்சரவைச் செயலாளர் மற்றும் சுகாதாரச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். இக்கூட்டத்தில்கரோனா தொற்றின் தீவிரம், கரோனா தடுப்பூசிப் பணிகளை விரைவுபடுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

Advertisment

இந்தநிலையில் பிரதமர் மோடி,வரும் 8 ஆம் தேதிகரோனாபரவல் தொடர்பாகவும், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்பாகவும் மாநில முதல்வர்களுடன் காணொளிவாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளதாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாளை கரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாநிலங்களுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

chief minister corona virus Narendra Modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe