Skip to main content

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள 18 மாநிலங்கள்

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

 

18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிளாஸ்டிக் பை உள்ளிட்ட பொருட்களுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளன. மேலும் ஆந்திரா, குஜராத், காஷ்மீர், கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்கள் வழிபாட்டு தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக்கை தடை செய்துள்ளன.

 

p

இது குறித்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மற்றும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

 

அந்த அறிக்கையில் மேலும்,  அசாம், பீகார், கோவா, மேகாலயா, மணிப்பூர், புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை இல்லை. ஒடிசா பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை எனவும்  கூறப்பட்டுள்ளது.   பிளாஸ்டிக் கழிவு மேம்பாடு பற்றிய செயல் திட்டங்களையும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்து இருப்பதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐஸ்கிரீம் டப்பாவில் சிக்கிய தலை; எலிக்கும் பிளாஸ்டிக் கேடு

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
 head stuck in an ice cream can; Plastic is bad for rats

மனிதர்களின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்ற விலங்குகளுக்கும் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தொடர்பான செய்திகள் அவ்வப்போது வெளியாவது வழக்கம். குறிப்பாக வனத்துறை பகுதிகளில் பிளாஸ்டிக் பாட்டில்களை வீசக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதும், கடல் பகுதிகளில் குப்பை கூளமாக தேங்கி நிற்கும் பிளாஸ்டிக் பொருட்களால் கடல் உயிரினங்கள் பாதிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் புதுச்சேரியில் சாப்பிட்டு விட்டு தூக்கி எறிந்த ஐஸ்கிரீம் டப்பாவில் தெரியாமல் தலையை மாட்டிக் கொண்ட எலி அவதிப்பட்டதும் அதை அங்கிருந்த காவலர்கள் மீட்டதும் தொடர்பான  வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

 head stuck in an ice cream can; Plastic is bad for rats

புதுச்சேரி கடற்கரை சாலையில் எலி ஒன்று தலையில் ஐஸ்கிரீம் டப்பாவில் தலை சிக்கியபடி அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் லாவகமாக பிடித்து எலியின் தலையில் சிக்கி இருந்த பிளாஸ்டிக் ஐஸ்கிரீம் டப்பாவை அகற்றி மீண்டும் விட்டனர். இந்த  காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

காய்கறி வார சந்தையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்!

Published on 02/12/2021 | Edited on 02/12/2021

 

Plastic Eradication Awareness Campaign at Weekly Vegetable Market

 

உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பில் நேற்று (01.12.2021) மாலை உளுந்தூர்பேட்டை காய்கறி வார சந்தையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் இரமேஷ் பாபு தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர்கள் வின்சென்ட், திலீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர், பொருளாளர் முருகன் வரவேற்றார்.  

 

மாவட்ட சிறப்புத் திட்டத் தலைவர் அன்பழகன், வெங்கடாஜலபதி, முத்துக்குமாரசாமி,  மூத்த உறுப்பினர் ரவி பேரூராட்சி மேற்பார்வையாளர்கள் தமிழ்மணி,  சத்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் காய்கறி வாரச் சந்தையில் பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை வாங்கிவந்த 100க்கும் மேற்பட்டவர்களிடம் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், அவர்களுக்குத் துணிப்பை வழங்கப்பட்டது. உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது.